தமிழ்நாடு மின் வாரிய உதவிப் பொறியாளர் தேர்விற்கு, மூன்று நாட்களில், 25 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். தமிழ்நாடு மின் வாரியம், ஊழியர் பற்றாக்குறையை சமாளிக்க, எலக்ட்ரிகல், மெக்கானிக்கல், சிவில் பிரிவுகளில், 375 உதவிப் பொறியாளர்களை,எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்ய முடிவு செய்துள்ளது.
இதற்கான அறிவிப்பு, டிச., 28ல் வெளியானது. சென்னை, அண்ணா பல்கலையில், ஜன., 31ல் எழுத்துத் தேர்வு நடக்க உள்ளது. இந்த அறிவிப்பு வெளியாகிய மூன்று நாட்களுக்குள், 25 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.இதுகுறித்து, எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:தமிழக அரசின் மற்ற துறைகளை விட, மின் வாரியத்தில் தான் அதிக சம்பளம் வழங்கப்படுகிறது. முதல் முறையாக, அண்ணா பல்கலை மூலம் எழுத்துத் தேர்வு நடத்தப்படுவதால் முறைகேடு குறையும் என்றநம்பிக்கை பட்டதாரிகளிடம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Jan 2, 2016
Home
kalviseithi
உதவி பொறியாளர் தேர்வு 25 ஆயிரம் பேர் விண்ணப்பம்
உதவி பொறியாளர் தேர்வு 25 ஆயிரம் பேர் விண்ணப்பம்
Recommanded News
Related Post:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி