கோவை மாவட்டத்துக்கு உள்பட்ட அனைத்து ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளில் வரும்ஜனவரி 5 முதல் 8-ஆம் தேதி வரை கல்வித்தர அடைவு சோதனை நடைபெற உள்ளது. இதுகுறித்து கோவை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் வ.மல்லிகா தெரிவித்ததாவது:
தமிழகம் முழுவதுமுள்ள அனைத்து அரசுப் பள்ளிகளில் 3,5 மற்றும் 8-ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான கல்வித்தர அடைவு சோதனை வரும் ஜனவரி 5 முதல் 8-ஆம் தேதி வரை நடத்த அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மாநில திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி உத்தரவிட்டுள்ளார்.அரசு, நகராட்சி, நலத்துறை மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இச்சோதனை நடைபெற உள்ளது. இதற்கென ஒவ்வோர் ஒன்றியத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 மாணவர்களுக்கு 10 பள்ளிகளும் 15 மாணவர்களுக்கு 6 பள்ளிகளிலும், 1 ஆங்கில வழிப் பள்ளியிலும் மொத்தம்16 பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம், கணிதப் பாடங்களில் இச்சோதனையை நடத்த வேண்டும். இதேபோல், 8-ஆம் வகுப்புக்கு 10 பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் அடைவுச் சோதனை நடத்தப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Jan 2, 2016
Home
kalviseithi
அரசுப் பள்ளிகளில் அடைவு சோதனை: ஜனவரி 5-இல் தொடக்கம்
அரசுப் பள்ளிகளில் அடைவு சோதனை: ஜனவரி 5-இல் தொடக்கம்
Recommanded News
Related Post:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி