முற்றுப்புள்ளி
கடந்த, 2015, பிளஸ் 2 பொதுத்தேர்வின் போது கணித தேர்வு நாளில், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் தனியார் பள்ளி தேர்வு மையத்தில் சில ஆசிரியர்கள் மூலம், 'வாட்ஸ் ஆப்'பில் வினாத்தாள் வெளியானது. இந்த ஆண்டு இப்பிரச்னைக்கு, தேர்வுத்துறை முற்றுப்புள்ளி வைத்துள்ளது.'தேர்வு மைய பணிக்கு வரும் ஆசிரியர்கள், எந்தக் காரணத்திற்காகவும் மொபைல் போன் கொண்டுவரக் கூடாது. அதே போல், மாணவர்கள் மற்றும் ஊழியர்களும் மொபைல் போன் கொண்டுவரக் கூடாது' என, உத்தரவு பிறப்பித்துள்ளது.கடந்த பொதுத்தேர்வின் போது பல மாணவர்கள், 100க்கு, 97 சதவீதம் நன்றாக பதில்எழுதியிருந்தாலும், விடைத்தாள் முழுவதையும், 'ஸ்கெச்சால்' அடித்திருந்தனர். இதை விசாரித்த போது, தேர்வில், 'சென்டம்' எடுக்க முடியாது என நினைத்தால், உடனடித் தேர்வை எழுதும் வகையில் விடைத்தாளை, 'ஸ்கெச்சால்' அடிக்கும் வழிமுறையை, தனியார் பள்ளி மாணவர்கள் மேற்கொண்டது தெரியவந்தது.
வரவேற்பு
எனவே, 'இந்த ஆண்டு, விடைத்தாளில் பதிலை எழுதிவிட்டு முழுவதுமாக, 'ஸ்கெச்சால்'அடிக்கக் கூடாது; அவ்வாறு அடித்தாலும் அந்த விடைத்தாள் திருத்தப்பட்டு மதிப்பெண் வழங்கப்படும்' என்றும், தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு, ஆசிரியர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.முறைகேடுகளை தடுக்க, தேர்வுத்துறை எடுத்த முடிவுகளை வரவேற்கிறோம். தனியார் பள்ளிஆசிரியர்களுக்கும் இந்த உத்தரவை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும். சத்தியமூர்த்தி, தலைவர் - உயர் மற்றும் மேல்நிலை தலைமை ஆசிரியர் சங்கம்
மதிப்பிற்குரிய கல்வி செய்தி அட்மின் அவர்களே
ReplyDeleteஉச்ச நீதி மன்ற ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு
ஆதி திராவிடர் நலத்துறை 30 சதவீத இடைநிலை ஆசிரியர் நியமன வழக்கு பற்றி தகவல் பதிவிடுங்கள்
கல்வி செய்தி தளம் வாசகர்களுக்கு சரியான தகவலை தரும் என்ற நம்பிக்கையில் தான் பார்க்கிறோம்.
ஆனால் வழக்கு பற்றிய சரியான பதிலும் தகவலும் இல்லாததால் வாசகர்களுக்கு ஏமாற்றமும் வருத்தமும் தான் மிஞ்சுகிறது.
வழக்கு விசாரணைக்கு வரவில்லையென்றால் கூட ஒரு போஸ்ட் மூலம் தெரிவியுங்கள்.
அல்லது கம்மான்ட்ஸ் மூலம் பதில் தெரிவியுங்கள்.
அன்புடன்
கல்வி செய்தி வாசகர் & அரசு பள்ளி ஆசிரியர்