விதிமுறை மீறி மாணவர் சேர்க்கை மெட்ரிக் பள்ளிகள் அட்டகாசம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 5, 2016

விதிமுறை மீறி மாணவர் சேர்க்கை மெட்ரிக் பள்ளிகள் அட்டகாசம்

விதிமுறைகளை மீறி தனியார் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை நடப்பதாக புகார் எழுந்துள்ளது.பள்ளிக் கல்வி விதிமுறைகள், கட்டாய கல்வி உரிமை சட்டம் மற்றும் தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே, பள்ளிகள் செயல்பட முடியும்.


ஆனால், தனியார் பள்ளிகள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப, விதிமுறைகளை மீறி செயல்படுகின்றன.அரசின் உத்தரவுப்படி, பள்ளிகளில் பாடங்கள் மற்றும் வகுப்புகளின் எண்ணிக்கை, உள்கட்டமைப்பு வசதி, மாணவர் எண்ணிக்கை போன்றவற்றுக்கு முறையான அனுமதி பெற வேண்டும்.ஆனால், பெரும்பாலான தனியார் மெட்ரிக் பள்ளிகள், அங்கீகார சான்றிதழில் கூறப்பட்ட விதிமுறைகளை மீறி, எல்.கே.ஜி., முதல், 9ம் வகுப்பு வரையில், மாணவர் சேர்க்கை நடத்துவதாக புகார் எழுந்துள்ளது.தற்போது புதிய கல்வி ஆண்டு நெருங்குவதால், எல்.கே.ஜி., வகுப்புக்கு, 'ஆன்லைன்' உள்ளிட்ட இரு வழிகளில், மாணவர் சேர்க்கை நடக்கிறது. இதில், நன்கொடைக்கு ஏற்ப, கூடுதல் வகுப்புகள் துவங்குகின்றனர்; அதில், கூடுதலான மாணவர்கள்சேர்க்கப்படுகின்றனர்.


இது குறித்து, பெற்றோர்கள் கூறியதாவது:எந்த பள்ளியிலும், மாணவர் சேர்க்கைக்கு முறையான அறிவிப்பு இல்லை. இடைத்தரகர்கள், பெற்றோர் - ஆசிரியர் சங்கத்தினர் மூலம் சேர்க்கை நடவடிக்கைகள் தடையின்றி துவங்கியுள்ளன.இதில் பல பள்ளிகள், தேவையான உள்கட்டமைப்பு வசதிகள்இல்லாமலேயே, கூடுதல் வகுப்புகள் துவங்கவும், கூடுதல் மாணவர்களை சேர்க்கவும் முயற்சிக்கின்றன. இதை தடுக்க, சட்ட நடவடிக்கை எடுக்கவோ, 'நோட்டீஸ்' அனுப்பவோ யாரும் முயற்சி செய்யவில்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி