பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ரத்து: அரசு அலுவலர் ஒன்றியம் வலியுறுத்தல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 2, 2016

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ரத்து: அரசு அலுவலர் ஒன்றியம் வலியுறுத்தல்

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாவட்டத் தலைவர் சு.அருணாசலம் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:இளைஞர்கள் அரசுப் பணிகளில் சேர ஊக்குவிக்கும் புதிய திட்டங்களை அரசு அலுவலர் ஒன்றியம் செயல்படுத்தி வருகிறது.


அதன்படி டி.என்.பி.எஸ்.சி. பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அரசு ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். தொழில் வரியை ரத்து செய்ய வேண்டும். அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். தொகுப்பூதிய பணியாளர்கள் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறோம் என்றார் அவர்.நிர்வாகிகள் எம்.பி.ராதாகிருஷ்ணன், சிவ.நக்கீரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி