ரயில்வே ஊழியர்கள் ஏப். 11 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: நாடு முழுவதும் 13 லட்சம் பேர் பங்கேற்பார்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 14, 2016

ரயில்வே ஊழியர்கள் ஏப். 11 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: நாடு முழுவதும் 13 லட்சம் பேர் பங்கேற்பார்கள்

நாடு முழுவதும்ரயில்வே ஊழியர்கள் வரும் ஏப்ரல் 11-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். இதில் 13 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது.‘மத்திய அரசு ஊழியர்களுக் கான 7-வது ஊதிய கமிஷனில் உள்ள முரண்பாடுகளை நீக்க வேண்டும். அடிப்படை ஊதி யம் ரூ.26 ஆயிரம் என்று நிர்ணயித்து, இதற்கேற்ப மற்ற சம்பள விகிதங்களை மாற்றி அமைக்க வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.


ரயில்வே தனியார்மயமாக்கலை தடுக்க வேண்டும்’ என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில் மத்திய அரசு ஊழியர்களின் ‘தேசிய கூட் டுப் போராட்டக் குழு’ அமைக் கப்பட்டுள்ளது.இதில், நாடு முழுவதும் உள்ள ரயில்வே தொழிலாளர்களின் தொழிற்சங்கங்களும் பங்கேற்க முடிவு செய்துள்ளன. அகில இந்திய ரயில்வே தொழிலாளர் சம்மேளனம் (ஏஐஆர்எப்), இந்திய ரயில்வே தொழி லாளர் சம்மேளனம் (ஐஎன் டியூசி), தெற்கு ரயில்வேயில் எஸ்ஆர்எம்யூ, டிஆர்இயூ உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் பங்கேற்கவுள்ளன. வேலை நிறுத்தம் தொடர்பான அறி விப்பை எஸ்ஆர்எம்யூ தலைவர் கண்ணையா நாளை (15-ம் தேதி) அறிவிக்கவுள்ளார்.இந்நிலையில், டிஆர்இயூ சங்கத்தின் செயல் தலைவர் ஆர்.இளங்கோவன் நேற்று கூறியதாவது:மார்ச் 11-ம் தேதி நோட்டீஸ்புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், தனியார் ரயில்கள் இயக்க அனுமதிக்கக் கூடாது, காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல் 11-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளோம்.

அதற்கான நோட்டீஸை ரயில்வே மண்டலங்களில் உள்ள பொது மேலாளர்களிடம் மார்ச் 11-ம் தேதி வழங்க உள்ளோம். தெற்கு ரயில்வேயில் சுமார் 1 லட்சம் ஊழியர்கள் உட்பட நாடு முழுவதும் 13 லட்சம் ரயில்வே ஊழியர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்பார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

1 comment:

  1. அரசு ஊழியர்களின் கோரிக்கைகளைப் போராடித்தான் பெறவேண்டும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி