'ஜாக்டோ'வில் குழப்பம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 14, 2016

'ஜாக்டோ'வில் குழப்பம்

ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்ட அறிவிப்பு தொடர்பாக,'ஜாக்டோ' அமைப்பில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜியோ' மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ' இணைந்து, 15 ஆண்டுகளாக, பல போராட்டங்களை நடத்தி உள்ளன. இந்த அமைப்புகள், 12 ஆண்டுகளுக்கு முன் நடத்திய வேலைநிறுத்த போராட்டம், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பைஏற்படுத்தியது; 'டெசோ, டெஸ்மா' சட்டங்களும் கொண்டு வரப்பட்டன.


இதையடுத்து, 12 ஆண்டுகளுக்கு பின், இந்த இரு அமைப்புகளும் ஒற்றுமையாக, 2015 பிப்ரவரி முதல், கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், பேரணி, மறியல்,உண்ணாவிரதம், வேலைநிறுத்தம் என, ஐந்து வகையான போராட்டங்களை நடத்தி வருகின்றன; ஆனாலும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.சில தினங்களுக்கு முன், இரு அமைப்புகளையும் தனித்தனியே அழைத்து, அமைச்சர்கள் குழுபேச்சு நடத்தியது. பேச்சு தோல்விஅடைந்ததால், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர், காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.அதே நேரத்தில், 'ஜாக்டோ' அமைப்பினரிடம்பேச்சு நடத்திய அமைச்சர்கள் குழுவினர், 'பிப்., 16க்குபின், கோரிக்கைகளை நிறைவேற்றப்படும்' என, உறுதியளித்தனர்; அவர்கள் அதை ஏற்றுக் கொண்டனர்.இந்நிலையில், 'ஜாக்டோ' அமைப்பில் இடம்பெற்றுள்ள, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, அரசு ஊழியர் சங்கத்துடன் இணைந்து, நாளை முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது. தமிழ்நாடுமுதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம், பிப்., 17 முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்துள்ளது.'ஜாக்டோ' அமைப்பில் உள்ள சங்கங்கள், தனித்தனியே வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

அரசு பிப்ரவரி 16க்குள் எந்த நடவடிக்கையும் எடுக்காவிட்டால், 17 முதல் அரசு ஊழியர்சங்கங்களுடன் இணைந்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்.கே.டி.ஓ.சுரேஷ்மாநில தலைவர் - முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம்வேலைநிறுத்தம் தொடர்பாக, கூட்டுக் குழுவில் எந்த முடிவும் எடுக்கவில்லை. அமைச்சர்கள் அளித்த வாக்குறுதியை ஏற்று, பிப்., 16 வரை காத்திருக்க முடிவுசெய்துள்ளோம்.இளங்கோவன்'ஜாக்டோ' கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி