தமிழகத்தில் வரும் மார்ச் மாதம் பொதுத்தேர்வுகள் நடக்க உள்ளது. இதில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 11 லட்சத்து 79 ஆயிரத்து 500 பேர் எழுதுகின்றனர். பிளஸ்2 தேர்வை 8 லட்சத்து மேற்பட்டவர்களும் எழுத உள்ளனர். பொதுத்தேர்வு விடைத்தாள் முதல் பக்கத்தில் மாணவர்களின் புகைப்படம், பார்கோடிங் முறை என அடுத்தடுத்து தேர்வு துறை சார்பில் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு முதன்முறையாக 14 இலக்கம் கொண்ட நிரந்தர யுனிக் ஐடி எண் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.இதில் எந்த வகுப்பு, தேர்வு எழுதும் மாதம், ஆண்டு, மாவட்ட கோடு எண், ரெகுலர் என்றால் ஆர், பிரைவேட் என்றால் பி ஆகிய ஏழு குறியீடுகளுடன் 14 இலக்க எண்களும் வழங்கப்படும்.இதன் மூலம் மார்ச் தேர்வுக்கு பின் அக்டோபரில் தேர்வுஎழுதும் மாணவர்களுக்கு தனியாக பதிவு எண் வழங்காமல், யுனிக் ஐடி எண்களையே பயன்படுத்தலாம், இதன் மூலம் மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் கிடைக்கும். அதேபோல் 10ம் வகுப்பில் வழங்கப்படும் இதே எண்ணை பிளஸ் 2 தேர்விலும் பயன்படுத்த திட்டமிடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு முதல் மாணவர்களின் பதிவு எண் போன்று விடைத்தாளின் முதல் பக்கத்திலும், மதிப்பெண் சான்றிதழ்களிலும் யுனிக் ஐடிஎண்ணும் இடம்பெறும்.
ஹால் டிக்கெட்டில் எச்சரிக்கை:
துண்டுத்தாள் வைத்திருத்தல், பிற மாணவர்களை பார்த்து எழுதுதல், துண்டுத்தாளை பார்த்து எழுதுதல் உள்ளிட்ட நிகழ்வுகள்ஒழுங்கீன செயல்களாக கருதப்பட்டு, அதற்குரிய தண்டனைகள்வழங்கப்படும் என்று ஹால் டிக்கெட்டில் முதன்முறையாக அச்சிடப்பட உள்ளது.
Feb 3, 2016
Home
kalviseithi
இந்தாண்டு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 14 இலக்க நிரந்தர எண்
இந்தாண்டு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 14 இலக்க நிரந்தர எண்
Recommanded News
Related Post:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி