பிளஸ் 2 தேர்வு: தனித் தேர்வர்கள் தத்கலில் விண்ணப்பிக்க நாளை கடைசி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 3, 2016

பிளஸ் 2 தேர்வு: தனித் தேர்வர்கள் தத்கலில் விண்ணப்பிக்க நாளை கடைசி

பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு இதுவரை விண்ணப்பிக்காத தனித் தேர்வர்கள்  தத்கல் திட்டத்தில் விண்ணப்பிக்க வியாழக்கிழமை கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக, அரசுத் தேர்வுகள் மண்டல துணை இயக்குநர் மஹத்தாப்பானு வெளியிட்ட செய்திக்குறிப்பு:


மார்ச் மாதம் நடைபெறவுள்ள பிளஸ் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தவறி, இப்போது விண்ணப்பிக்கவிரும்பும் தனித் தேர்வர்கள், சிறப்பு அனுமதி திட்டத்தின் (தத்கல்) கீழ் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.தனித் தேர்வர்கள் எந்த மாவட்டத்தில் இருந்து விண்ணப்பிக்க விரும்புகிறார்களோ, அந்த மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையத்துக்கு பிப்.4ஆம் தேதிக்குள் நேரில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தனியார் இணையதள மையங்கள் மூலம்  விண்ணப்பிக்க இயலாது. சிறப்பு மையங்களின் விவரத்தை தேர்வுத் துறை இணையதளத்தில்  (ஜ்ஜ்ஜ்.ற்ய்க்ஞ்ங்.ண்ய்) தெரிந்துகொள்ளலாம்.

மேலும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்கள், மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்கள், தேர்வுத் துறை மண்டல துணை இயக்குநர் அலுவலகங்கள் மூலமாகவும் சிறப்பு மையங்களின் விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.தத்கல் திட்டத்தில் விண்ணப்பிக்கும் தனித் தேர்வர்கள் செலுத்த வேண்டிய தேர்வுக்  கட்டணத் தொகையானது பதிவுச்சீட்டில் குறிப்பிடப்பட்டு இருக்கும். ஹெச் வகை தனித் தேர்வர்கள் ஒரு பாடத்துக்கு ரூ.50-ம் (இதர கட்டணம் ரூ.35), ஹெச்.பி. வகை நேரடி தனித் தேர்வர்கள் ரூ.150 மற்றும் ரூ.37 என மொத்தம் ரூ.187-ம், இவற்றுடன் கூடுதலாக சிறப்பு அனுமதிக் கட்டணமாக ரூ.1000, ஆன்லைன் பதிவுக் கட்டணமாக ரூ.50 ஆகியவற்றை பணமாக மட்டுமே சிறப்பு மையத்தில் செலுத்த வேண்டும்.தேர்வுக் கூட அனுமதிச் சீட்டை தேர்வுத் துறை இணையதளத்தில் பின்னர் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதற்கான தேதி பிறகு அறிவிக்கப்படும்.

தத்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் தனித் தேர்வர்களுக்கு அவர்கள் விண்ணப்பிக்கும் மாவட்டத்தில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்படும். தேர்வு மைய விவரம் அனுமதிச் சீட்டில் குறிப்பிடப்படும்.தனித் தேர்வர்கள் தேர்வெழுத வழங்கப்படும் அனுமதி முற்றிலும் தாற்காலிகமானது. அவர்களின் விண்ணப்பம் மற்றும் தகுதி குறித்து ஆய்வு செய்த பின்னரே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றார் அவர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி