ஜாக்டோ போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு ஒருநாள் ஊதியப் பிடித்தம் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின. ஆனாலும் இது பற்றி அரசுதான் முடிவு எடுக்கும் என தெரிவித்திருந்தனர். இதுபற்றி இதுவரை உறுதியான தகவல் தெரியாததால், ஊதியப் பட்டியல் கோருவதிலும், வருமானவரிக்கானகணக்கீட்டுப் படிவங்களை பூர்த்தி செய்வதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
ஒருநாள் ஊதியப் பிடித்தம் உறுதியானால், பிப்ரவரி மாத ஊதியத்தில் அடிப்படை ஊதியம், தனி ஊதியம், தர ஊதியம், அகவிலைப்படி, வீட்டுவாடகைப்படி, நகர ஈட்டுப்படி, மருத்துவப்படி, சிறப்புப்படி இவற்றை 29 ஆல் வகுத்து, ஒருநாள் ஊதியத்தை கழித்து ஊதியம் வழங்க வேண்டும்.
பிப்ரவரி மாத ஊதியப் பட்டியலுடன் வருமானவரி கணக்கீட்டுப் படிவங்களையும் ஆசிரியர்கள் அளிக்க வேண்டியிருப்பதால், ஊதியப் பட்டியல் கோருவதிலும், வருமானவரி கணக்கிடுவதிலும் குழப்ப நிலை காணப்படுகிறது.வழக்கமாக பிப்ரவரி மாதத்தில் ஆசிரியர்களின் வருமானவரி படிவங்கள்சரிபார்க்கப் பட்டு, அதன் பின்னரே ஊதியம் வழங்கப்படும். இதனால் பிப்ரவரி மாத ஊதியம் தாமதமாக கிடைக்கும்.
தற்போது ஒருநாள் ஊதியப் பிடித்தம் பற்றிய குழப்பநிலை நிலவுவதால்,பிப்ரவரி மாத ஊதியப் பட்டியல் தயாரிப்பதிலும், வருமானவரி கணக்கீட்டுப் படிவங்கள் தயாரிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதுடன், பிப்ரவரி மாத ஊதியம் கிடைப்பதில் மேலும் தாமதமாகும் நிலை உருவாகியுள்ளது. எனவே இதுபற்றி அரசு விரைவில் அறிவிக்க வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்..
Feb 3, 2016
Home
kalviseithi
ஒருநாள் ஊதியப்பிடித்தம் - உறுதியான தகவல் இல்லை: பிப்ரவரி மாத ஊதியம் தள்ளிப்போகும் !!
ஒருநாள் ஊதியப்பிடித்தம் - உறுதியான தகவல் இல்லை: பிப்ரவரி மாத ஊதியம் தள்ளிப்போகும் !!
Recommanded News
Related Post:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி