ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் ஊதியம் பிடித்தம்செய்ய கணக்கெடுக்கும் பணி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 3, 2016

ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் ஊதியம் பிடித்தம்செய்ய கணக்கெடுக்கும் பணி

கரூர் மாவட்டத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு ஊதியம் பிடிப்பதற்கான கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எம். ராமசாமி தெரிவித்தார்.15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினர்கடந்த 30-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு கைதாகினர்.


இவர்கள் வேலையைப் புறக்கணித்துவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது.  இதனால், ஆசிரியர்களின் ஊதியத்தைப் பிடித்தம் செய்ய வேண்டும் என அரசு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கு அறிக்கை அனுப்பியுள்ளது.இதுதொடர்பாக கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எம். ராமசாமி கூறுகையில், கரூர் மாவட்டத்தில் 4,000 பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 1600 பேர் கடந்த 3 நாட்களாக நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.இவர்களில் விடுமுறை எடுக்காமல் பணியைப் புறக்கணித்து,போராட்டத்தில் பங்கேற்றவர்களின் பட்டியலை தயாரித்து வருகிறோம்.அரசு உத்தரவின்படி அவர்களது ஊதியத்தைப் பிடித்தம் செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி