அரசு பள்ளிகளில் சனிக்கிழமை ஒரு தினத்தை மட்டும் புத்தகப் பைகள் இல்லாத தினமாக கடைப்பிடிக்க உத்தரப் பிரதேச அரசு திட்டமிட்டு வருகிறது.
இதுதொடர்பாக அந்த மாநில அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தலைநகர் லக்னௌவில் துணை முதல்வர் தினேஷ் சர்மா தலைமையில் வெள்ளிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, அரசு பள்ளிகளில் சனிக்கிழமை ஒரு நாளை மட்டும் புத்தகப் பைகள் இல்லாத தினமாக அறிவிக்கலாம் என்று ஆலோசனை தெரிவிக்கப்பட்டது.
இதன்படி, சனிக்கிழமை ஒரு நாள் மட்டும் பள்ளிகளுக்கு மாணவ, மாணவிகள் புத்தகப் பைகளை எடுத்து வரத் தேவையில்லை.அன்றைய தினம் படிப்பைத் தவிர விளையாட்டு போன்ற மற்ற திறன் விஷயங்களில் மாணவர்கள் ஆர்வம் காட்டலாம். இதன்மூலம், ஆசிரியர், மாணவர்களுக்கு இடையே நல்ல புரிந்துணர்வு ஏற்படவும் வாய்ப்புள்ளது என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அரசு பள்ளி மாணவ, மாணவிகளின் சீருடைகளின் வண்ணங்களையும் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு மாற்றியமைத்தது.கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும்போது புதிய வண்ண சீருடைகளை மாணவர்கள் அணிந்துச் செல்ல உள்ளனர்.
இதுதொடர்பாக அந்த மாநில அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தலைநகர் லக்னௌவில் துணை முதல்வர் தினேஷ் சர்மா தலைமையில் வெள்ளிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, அரசு பள்ளிகளில் சனிக்கிழமை ஒரு நாளை மட்டும் புத்தகப் பைகள் இல்லாத தினமாக அறிவிக்கலாம் என்று ஆலோசனை தெரிவிக்கப்பட்டது.
இதன்படி, சனிக்கிழமை ஒரு நாள் மட்டும் பள்ளிகளுக்கு மாணவ, மாணவிகள் புத்தகப் பைகளை எடுத்து வரத் தேவையில்லை.அன்றைய தினம் படிப்பைத் தவிர விளையாட்டு போன்ற மற்ற திறன் விஷயங்களில் மாணவர்கள் ஆர்வம் காட்டலாம். இதன்மூலம், ஆசிரியர், மாணவர்களுக்கு இடையே நல்ல புரிந்துணர்வு ஏற்படவும் வாய்ப்புள்ளது என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அரசு பள்ளி மாணவ, மாணவிகளின் சீருடைகளின் வண்ணங்களையும் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு மாற்றியமைத்தது.கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும்போது புதிய வண்ண சீருடைகளை மாணவர்கள் அணிந்துச் செல்ல உள்ளனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி