தற்காலிகமாக பணியாற்ற ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு வாய்ப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 16, 2017

தற்காலிகமாக பணியாற்ற ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு வாய்ப்பு.

போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மாநகர போக்கு வரத்து கழகத்தில் தினக்கூலி அடிப்படையில் தற்காலிக ஓட்டுநர் கள், நடத்துநர்கள் பணியாற்ற அழைப்பு விடுக்கப்பட்டுள் ளது.
போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்த அறிவிப்பை தொடர்ந்து, சென்னை, திருவள் ளூர் உள்பட பல மாவட்டங்களில்தற்காலிக பணியாளர்கள் மூலம் அரசு பேருந்துகளை இயக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.இது தொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் தற்காலிக தினக்கூலி அடிப்படையில் ஓட்டுநர்கள், நடத்துநர்களாக பணியாற்ற கனரகவாகன உரிமம், நடத்துநர் உரிமம் வைத்துள்ளவர்கள், அசல் சான்றிதழ்களுடன் அருகில் உள்ள மாநகர போக்குவரத்துக் கழக கிளையின் மேலாளரை உடனடியாக நேரில் அணுகவும். தகுதியின் அடிப்படையில் பணி வழங்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி