12 மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் ( CEO ) இடமாற்றம்: 6 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 28, 2017

12 மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் ( CEO ) இடமாற்றம்: 6 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

பள்ளிக்கல்வித்துறையில் 12 மாவட்ட முதன்மைகல்வி அதிகாரிகள் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டனர். மேலும், 6 மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு முதன்மை கல்வி அதிகாரிகளாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் நேற்று வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழக பள்ளிக்கல்வி பணியில் முதன்மை கல்வி அதிகாரி மற்றும் அதற்கு இணையான பதவியில் பணிபுரிந்து வரும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் 12 பேர் நிர்வாக நலன் கருதி இடமாற்றம் செய்யப்படுகிறார்கள். அதன்படி, ராமநாதபுரம், விழுப்புரம், தூத்துக்குடி, சிவகங்கை, கிருஷ்ணகிரி, திருவாரூர், விருதுநகர், திருநெல்வேலி, கரூர், கோவை, கடலூர், புதுக்கோட்டை ஆகிய 12 மாவட்டங்களின் முதன்மை கல்வி அதிகாரிகள் வேறு மாவட்டங்களுக்கும், இணையான வேறு பதவிக்கும் மாற்றப்பட்டு இருக்கிறார்கள்.மேலும், 6 மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பதவி உயர்வு அளிக்கப்படுகிறது.

அதன்படி, கோவை, புதுக்கோட்டை, சென்னை தெற்கு, திருவண்ணாமலை,விருதுநகர், மதுரை ஆகிய 6 கல்வி மாவட்டங்களில் பணிபுரியும் மாவட்ட கல்வி அதிகாரிகள் வேறு மாவட்டங்களுக்கு முதன்மை கல்வி அதிகாரியாகவும், பள்ளி கல்வித்துறையில் அதற்கு இணையான வேறு பதவிகளிலும் பணியமர்த்தப்படுகிறார்கள்.இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி