தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மையம் கொண்டுள்ளதால் தமிழக கடலோரங்களில் நாளை முதல் இரண்டு நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தகவல் அளித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 27ம் தேதி தொடங்கி, டிசம்பர் 31ம் தேதி நிறைவடைந்து. இந்த ஆண்டு பருவமழை 9 சதவீதம் குறைவாக பதிவானது. தற்போது பனியின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில், வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மையம் கொண்டுள்ளதால் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. இதுகுறித்து பேசிய பாலச்சந்திரன், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள தெற்கு அந்தமான் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மையம் கொண்டுள்ளது.
இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரங்களில் ஓரிரு இடங்களில் நாளை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இன்று வறண்ட வானிலை காணப்படும் என்றும், வடக்கிழக்கில் இருந்து நிலக்காற்று வீசுவதால் இரவில் குளிர்ந்த நிலை ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரங்களில் இன்று வடகிழக்கில் இருந்து மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும். இதனால் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 27ம் தேதி தொடங்கி, டிசம்பர் 31ம் தேதி நிறைவடைந்து. இந்த ஆண்டு பருவமழை 9 சதவீதம் குறைவாக பதிவானது. தற்போது பனியின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில், வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மையம் கொண்டுள்ளதால் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. இதுகுறித்து பேசிய பாலச்சந்திரன், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள தெற்கு அந்தமான் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மையம் கொண்டுள்ளது.
இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரங்களில் ஓரிரு இடங்களில் நாளை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இன்று வறண்ட வானிலை காணப்படும் என்றும், வடக்கிழக்கில் இருந்து நிலக்காற்று வீசுவதால் இரவில் குளிர்ந்த நிலை ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரங்களில் இன்று வடகிழக்கில் இருந்து மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும். இதனால் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி