'நீட்' தேர்வு விண்ணப்பம் : பள்ளிகளில் உதவி மையம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 27, 2018

'நீட்' தேர்வு விண்ணப்பம் : பள்ளிகளில் உதவி மையம்

'நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க, அரசு பள்ளிகளில், உதவி மையங்கள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.பிளஸ் 2 அறிவியல் பிரிவு மாணவர்கள், தேர்வுக்கு பின்,
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மற்றும் சித்தா போன்ற படிப்புகளில் சேர, நீட் நுழைவு தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும். வரும் கல்வி ஆண்டிற்கான, நீட் தேர்வு, மே, 6ல் நடக்கிறது. இந்த தேர்வில், தமிழகத்தில் இருந்து, இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்க வாய்ப்புள்ளது.நீட் தேர்வில், தமிழக பாடத்திட்டத்தில் படிக்கும் அரசு பள்ளி மாணவர்கள், அதிகம் தேர்ச்சி பெற, தமிழக அரசின் சார்பில், இலவச பயிற்சி வழங்கப்படுகிறது.

 இலவச பயிற்சி பெறும் மாணவர்கள், நீட் தேர்வுக்கு முறையாக விண்ணப்பிக்க, உதவ வேண்டும் என, தலைமை ஆசிரியர்களுக்கு, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அரசு பள்ளிகளில், நீட் தேர்வுக்கு, விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களுக்கும், உதவி மையம் அமைத்து, உதவ வேண்டும் என்றும், மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி