1000 பள்ளிகளுக்கு கிராமங்களில் 'பூட்டு' : ஆசிரியர் சங்க நிர்வாகி தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 25, 2018

1000 பள்ளிகளுக்கு கிராமங்களில் 'பூட்டு' : ஆசிரியர் சங்க நிர்வாகி தகவல்

''கிராமங்களில் 1,000 பள்ளிகளை மூடவும்,5,000 ஆசிரியர் பணியிடங்களையும் குறைக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது,'' என 'ஜாக்டோ' உயர்மட்ட குழு உறுப்பினர் வின்சென்ட் பால்ராஜ் தெரிவித்தார்.
பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வலியுறுத்தி மறியல், விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பு போராட்டம், தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜாக்டோ) சார்பில் நடந்தது. திண்டுக்கல்லில் மறியல் செய்த 50 பேர் கைதாகினர்.

வின்சென்ட் பால்ராஜ் கூறியதாவது:'நவ., 30க்குள் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த வல்லுனர் குழு அறிக்கை பெறப்படும்' என தமிழக முதல்வர் கூறினார். இதுவரை அறிக்கை தாக்கல் செய்யவில்லை. கிராமங்களில் 1,000 பள்ளிகளை மூடவும், 5,000 ஆசிரியர் பணியிடங்களை குறைக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது; இதை கைவிட வேண்டும். பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் 79 மையங்களில் 64ல் போராட்டத்தால் பணி நடக்கவில்லை. பேச்சுவார்த்தை நடத்தும் வரை பணியை புறக்கணிப்போம், என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி