2009 & TET போராட்டக்குழு ஆசிரியர்கள் கவனத்திற்கு....!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 30, 2018

2009 & TET போராட்டக்குழு ஆசிரியர்கள் கவனத்திற்கு....!!

*தற்போது அனைத்து வாட்சாப் குழு மற்றும் இணையத்தில் வந்து கொண்டிருக்கும்

ஒருநபர் குழுவிற்கு அனுப்பிட சொல்லும் கடிதம் மாநில போராட்டக்குழு சார்பில் வெளியிட்ட கடிதம் இல்லை. யாரும் அனுப்ப வேண்டாம் என மாநில போராட்டக்குழு சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.*

 *வரும் வாரத்தில் மாநில போராட்டக்குழு சார்பில் நமது கல்வித் துறை முதன்மை செயலாளர் மற்றும் ஒருநபர் குழு தலைவர்  அவர்களையும் சந்தித்த பின்னர்  மாநில போராட்டக்குழு சார்பில் கடிதம் மாதிரி அனுப்பப்படும்.  அதற்கு பின்னர் அனுப்பிட கேட்டுக் கொள்ளப்படுகிறது.*

👉👉
 *✒2009 & TET மாநில போராட்டக்குழு

10 comments:

  1. அறிக்கை விபரம்:

    கடந்த அதிமுக ஆட்சியில் 2013 ம் ஆண்டு ஆகஸ்ட்மாதம் தமிழக அரசு ஆசிரியர் தகுதிதேர்வு நடத்தியது. இதில் தேர்ச்சி பெற்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் 94,000 பேருக்கு சான்றிதழ் சரிபார்க்கபட்டுள்ளது.மேலும் இச்சான்றிதழ் 7 ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும். அப்படி இருக்கும் நிலையில் இன்னும் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி வழங்காமல் இருப்பதை சமத்துவ மக்கள்கட்சி வன்மையாக கண்டிக்கிறது. ஏற்கனவே உயர்நீதிமன்ற மதுரை கிளை 2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கலாம் என பள்ளிகல்விதுறை செயலருக்கும், ஆசிரியர்தேர்வுவாரியத்திற்கும் அறிவுறுத்தியுள்ளது. எனவே பாதிக்கபட்ட 2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளித்து நடப்பு காலிப்பணியிடங்களை அவர்களை கொண்டு நிரப்பி பணியாணை வழங்கிட வேண்டும். மேலும் அவர்களுக்கு ஒரு வாரத்தில் பணி வழங்குகிறேன், ஒரு மாதத்தில் பணி வழங்குகிறேன் என வெற்றறிக்கைதராமல், வேலையை தந்திட நடவடிக்ககைளை மேற் கொள்ளவேண்டும். நான்காண்டுகளாக போராட்டங்களை நடத்தி வரும் 2013 ஆசிரியர்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் கண்ணீரை துடைத்து முதல்வர் தனிகவனம் செலுத்தி, அவர்களுக்கு பணியாணை வழங்கிட வேண்டும்.

    திரு. சரத்குமார்
    தலைவர்
    சமத்துவ மக்கள் கட்சி

    ReplyDelete
  2. 2013 ஆண்டில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றும் 5 ஆண்டுகளாக வேலை இல்லாமல் வாழ்க்கையே கேள்விக் குறியாக தவிக்கும் எங்களுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டு மனதை மகிழ்வித்த சரத்க்குமார் ஐயாவிற்கு காேடான காேடி நன்றிகள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி