சென்னையில் உள்ள வருமான வரித்துறையில் பல்வேறு பதவிகளுக்கு இணையதளத்தின் வழியாக பணி நியமன விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம் என வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தகவல் பரவியது. இந்நிலையில் www.incometaxindia.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம், இத்தகைய பணி நியமன நடைமுறை எதையும் மேற்கொள்ளவில்லை என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
மேலும், வருமான வரித்துறையின் அரசிதழ் பதிவு பெறாத பல்வேறு பதவிகளுக்கான பணி நியமனம் இத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் குறிப்பிட்ட நடைமுறையின்படி பணியார் தேர்வாணையத்தால் மட்டுமே செயல்படுத்தப்படும். எனவே, வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பரப்பப்படும் தவறான செய்திகளைப் பார்த்து ஏமாற வேண்டாம் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
அறிக்கை விபரம்:
ReplyDeleteகடந்த அதிமுக ஆட்சியில் 2013 ம் ஆண்டு ஆகஸ்ட்மாதம் தமிழக அரசு ஆசிரியர் தகுதிதேர்வு நடத்தியது. இதில் தேர்ச்சி பெற்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் 94,000 பேருக்கு சான்றிதழ் சரிபார்க்கபட்டுள்ளது.மேலும் இச்சான்றிதழ் 7 ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும். அப்படி இருக்கும் நிலையில் இன்னும் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி வழங்காமல் இருப்பதை சமத்துவ மக்கள்கட்சி வன்மையாக கண்டிக்கிறது. ஏற்கனவே உயர்நீதிமன்ற மதுரை கிளை 2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கலாம் என பள்ளிகல்விதுறை செயலருக்கும், ஆசிரியர்தேர்வுவாரியத்திற்கும் அறிவுறுத்தியுள்ளது. எனவே பாதிக்கபட்ட 2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளித்து நடப்பு காலிப்பணியிடங்களை அவர்களை கொண்டு நிரப்பி பணியாணை வழங்கிட வேண்டும். மேலும் அவர்களுக்கு ஒரு வாரத்தில் பணி வழங்குகிறேன், ஒரு மாதத்தில் பணி வழங்குகிறேன் என வெற்றறிக்கைதராமல், வேலையை தந்திட நடவடிக்ககைளை மேற் கொள்ளவேண்டும். நான்காண்டுகளாக போராட்டங்களை நடத்தி வரும் 2013 ஆசிரியர்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் கண்ணீரை துடைத்து முதல்வர் தனிகவனம் செலுத்தி, அவர்களுக்கு பணியாணை வழங்கிட வேண்டும்.
திரு. சரத்குமார்
தலைவர்
சமத்துவ மக்கள் கட்சி