AEEO - க்கு ₹2 லட்சம் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் அதிரடி உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 26, 2018

AEEO - க்கு ₹2 லட்சம் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் அதிரடி உத்தரவு

பள்ளி மாணவர்களுக்கு அரசு புத்தகம், மதிய உணவு வழங்க மறுத்த உதவி தொடக்க கல்வி அலுவருக்கு ₹2 லட்சம் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன். இவர், அதேப்பகுதியில் திரு.வி.க என்ற பெயரில்நடுநிலைப்பள்ளி ஒன்றை நடத்தி வந்தார். அந்த பள்ளியில் 103 மாணவர்கள் படித்து வந்துள்ளனர்.

பள்ளிக்கு அரசு நிதி உதவியின்படி மாணவர்களுக்கு இலவச புத்தகம், உடை உணவுஎன அனைத்தும் வழங்கப்பட்டு வந்துள்ளது. பின்னர், சிவில் வழக்கில் நீதிமன்ற உத்தரவின் படி பள்ளி இடமாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து பள்ளியில் பயின்று வரும் 103 மாணவர்களுக்கு கடந்த 2104-2015ம் ஆண்டு வரை அரசு நிதி உதவியிலிருந்து உணவு, உடை என எந்த சலுகைகளும் வழங்க முடியாது என வேலூர் மாவட்டம், நாட்றாம்பள்ளி உதவி தொடக்க கல்வி அலுவலர் சித்ரா கூறியுள்ளார்.இதையடுத்து, மகேந்திரன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிம்னறம், பள்ளிக்கு அரசு சலுகைகள் வழங்க உத்தரவிட்டது. இருந்தும் சித்ரா சலுகைகளை வழங்க மறுத்துள்ளார். இதுகுறித்து சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில் மகேந்திரன் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், இந்த வழக்கில் உதவி தொடக்க கல்வி அலுவலர் சித்ராவுக்கு ₹2 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது.

இந்த பணத்தை அரசு மனுதாரருக்கு கொடுத்துவிட்டு, சித்ராவிடம் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும், சித்ரா மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், 2014-15ம் ஆண்டுக்கான உணவு, புத்தகம் ஆகியவற்றுக்கான நிதியை பள்ளி நிர்வாகத்துக்கு வழங்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி