விடைத்தாள் திருத்தம் புறக்கணிப்பு வாபஸ் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 16, 2018

விடைத்தாள் திருத்தம் புறக்கணிப்பு வாபஸ்

விடைத்தாள் திருத்தும் பணிகளை புறக்கணிக்கும் போராட்டத்தை, 'ஜாக்டோ - ஜியோ' ரத்து செய்துள்ளது. ஜாக்டோ - ஜியோ என்ற, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் உயர்நிலை குழு கூட்டம், சென்னையில், நேற்று முன்தினம் நடந்தது.
இதில், பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.கூட்டமைப்பின் நிர்வாகிகள் கூறியதாவது: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான நிலுவை கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, ஏப்., 23 முதல், 27 வரை, 11 மண்டலங்களில், அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில், வேன் பிரசாரம் செய்யப்படும். அடுத்த கட்டமாக, மாவட்ட வாரியாக கூட்டங்கள் நடத்தப்படும். மே, 8ல், சென்னையில், கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்.

 இதில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஒரு லட்சம் பேர் பங்கேற்பர்.அதேபோல், ஜாக்டோ - ஜியோ போராட்டங்கள், மாணவர்களின் நலனை எந்த விதத்திலும் பாதிக்க கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம். எனவே, பொது தேர்வுக்கான விடைத்தாள் திருத்த போராட்ட அறிவிப்பை ரத்து செய்வதுஎன, முடிவு எடுத்துள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி