அரசு பள்ளியில் மாணவர்களுக்கு மேளதாளம் முழங்க வரவேற்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 30, 2018

அரசு பள்ளியில் மாணவர்களுக்கு மேளதாளம் முழங்க வரவேற்பு


தேனி மாவட்டம் சில்வார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு மேளதாளம் முழங்க நெற்றித்திலகமிட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது.

தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 6 ம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இவர்களில் 50 க்கும் மேற்பட்டவர்கள் தனியார் பள்ளிகளில் படித்தவர்கள்.

நேற்று பள்ளிக்கு வந்த மாணவர்களை, ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள், மேளதாளம் முழங்க நெற்றித்திலகமிட்டு மாலை அணிவித்து வரவேற்றனர்.தலைமை ஆசிரியர் மோகன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுப்பையா, பொருளாளர் ராஜமாணிக்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி