இன்றுடன் நிறைவடைகிறது முதல்கட்ட எம்பிபிஎஸ் பிடிஎஸ் கலந்தாய்வு ! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 7, 2018

இன்றுடன் நிறைவடைகிறது முதல்கட்ட எம்பிபிஎஸ் பிடிஎஸ் கலந்தாய்வு !

எம்பிபிஎஸ் பிடிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு இன்றுடன் முடிகிறது. இன்றைய கலந்தாய்வில் பங்கேற்க 1,112 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பாக நேற்று மாலையுடன் 5 நாள் பொதுப்பிரிவு கலந்தாய்வு முடிந்துள்ளது.  இந்நிலையில் அரசுகல்லூரிகளில் எஸ்சி, எஸசிஏ, எஸ்டி பிரிவுகளில் 196 இடங்களும், தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீடு இடங்கள் 200ம், அரசுப் பல் மருத்துவக்கல்லூரியில் 16 இடங்களும், தனியார் பல்மருத்துவகல்லூரிகளில் 641 அரசு ஒதுக்கீடு இடங்களும் மட்டுமே காலியாக உள்ளன.

இந்த இடங்களில் அரசுக்கல்லூரிகளில் 212 இடங்கள் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது. இன்றைய கலந்தாய்வுக்கு 1,112 மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இவற்றில் அரசுக்கல்லூரிகளில் இடம் இல்லாத மாணவர்கள் வேறு வழியின்றி தனியார் கல்லூரிகளில் சேர்கின்றனர். இரண்டாம் கட்ட கலந்தாய்வு தொடர்பாக மருத்துவக்கல்வி இயக்கக இணைதளத்தில் தகவல் தெரிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பூபதிராஜாவுக்கு இடம் கிடைக்குமா?: முன்னாள்  ராணுவத்தினரின் வாரிசுகள் பிரிவில் கலந்தாய்வில்எழும்பூர் ரயில் நிலையத்தில் சான்றிதழை தொலைத்த விருதுநகர்  மாவட்டத்தை சேர்ந்த மாணவர் பூபதி ராஜா இன்று கலந்தாய்வில்  பங்கேற்க இருக்கிறார். 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி