பள்ளிக்கல்வித்துறையின்கீழ் உள்ள அரசு, தனியார் பள்ளிகளில் விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் எதையும் நடத்தக்கூடாது ! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 23, 2018

பள்ளிக்கல்வித்துறையின்கீழ் உள்ள அரசு, தனியார் பள்ளிகளில் விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் எதையும் நடத்தக்கூடாது !


தமிழக பள்ளிக்கல்வித்துறையின்கீழ் செயல்படும் பள்ளிகளில் இன்று முதல் அக்டோபர் 2ம் தேதி வரை காலாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறையின்கீழ் உள்ள அரசு, தனியார் பள்ளிகளில் செப்டம்பர் 10ம் தேதி முதல் 22ம் தேதி வரை பள்ளிகளில் 10ம் வகுப்பு , பிளஸ்1, பிளஸ்2 மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடந்தது. அதே போல் ஒன்றாம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு முதல் பருவத்தேர்வும் முடிந்தது. இதையடுத்து இன்று முதல் அக்டோபர் 2ம் தேதி வரை காலாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 100 சதவீத மாணவர் தேர்ச்சிக்காக, விடுமுறை நாட்களில் 10ம் வகுப்பு, பிளஸ்2 மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாக பரவலாக குற்றச்சாட்டு உள்ளது.பிளஸ்1 மதிப்பெண்ணுடன் இணைந்த ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் வெளியிடும் நடைமுறை திரும்ப பெறப்பட்டு, பிளஸ்2 மதிப்பெண் மட்டுமே கொண்ட மதிப்பெண் பட்டியல் வெளியிடும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் காலாண்டு தேர்வு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் எதையும் நடத்தக்கூடாது என்று பள்ளி நிர்வாகங்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உயரதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி