தேசிய திறனாய்வுத் தேர்வில் சென்னை மாணவர் முதலிடம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 6, 2018

தேசிய திறனாய்வுத் தேர்வில் சென்னை மாணவர் முதலிடம்!


உயர் படிப்புகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் தேசிய திறனாய்வுத் தேர்வில், தமிழக அளவில் சென்னையைச் சேர்ந்த மாணவர் முதலிடம் பிடித்துள்ளார்.

கடினமான தேர்வாகக் கருதப்படும் தேசிய திறனாய்வுத் தேர்வு இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல் நிலைத் தேர்வு கடந்தாண்டு நவம்பர் 18ஆம் தேதியன்று மாநில அரசால் நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் இரண்டாவது கட்டத் தேர்வுக்குத் தகுதி பெற்றவர்கள் ஆவர். கடந்த மே 13ஆம் தேதியன்று, இது என்சிஇஆர்டியால் நடத்தப்பட்டது.இந்த தேர்வை நாடு முழுவதும் 12 லட்சம் பேர் எழுதினர். இதில், 1,000 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

 இதில், தமிழ்நாட்டில் பொதுப் பிரிவைச் சேர்ந்த 54 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் தமிழக அளவில் சென்னையைச் சேர்ந்த ஆதித்யாஎன்ற மாணவர் முதலிடம் பிடித்துள்ளார்.

இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, அரசு சார்பில் ஆராய்ச்சிப் படிப்பு, முதுகலைப் பட்டப்படிப்பு போன்ற உயர் படிப்புகள், மருத்துவ உயர்படிப்புகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி