நாட்டில் அடிப்படை கணக்கு கூட தெரியாத 56% மாணவர்கள் - கல்விநிலை அறிக்கையில் தகவல்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 16, 2019

நாட்டில் அடிப்படை கணக்கு கூட தெரியாத 56% மாணவர்கள் - கல்விநிலை அறிக்கையில் தகவல்!


நாட்டில் உள்ள 56 சதவீத 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு அடிப்படை கணக்கு கூட தெரியவில்லை என ஆண்டு கல்விநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018 ம் ஆண்டு கல்விநிலை அறிக்கையின்படி, நாட்டில் உள்ள 56 சதவீதம் 6 ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுத்தல் போன்ற அடிப்படை கணக்குகள் கூட தெரியவில்லை. 5 ம் வகுப்பு படிப்பவர்களில் 72 சதவீதம் பேருக்கு எளிய வகுத்தல் கணக்குகள் கூட தெரியவில்லை. 70 சதவீதம்3 ம் வகுப்பு மாணவர்களுக்கு கழித்தல் கணக்குகள் தெரிவதில்லை. நமது மாணவர்கள் ஒரு விஷயத்தை வாசிக்க மிகவும் கஷ்டப்படுகிறார்கள்.

தேசிய அளவில் 8 ம் வகுப்பு படிக்கும் 4ல் ஒரு குழந்தைக்கு வாசிக்கும் திறன் இல்லை. 2008 ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 84.8 சதவீதம் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு வாசிக்க தெரிவதில்லை.

2018 ல் பள்ளி படிப்படை பாதியில் நிறுத்திய மாணவர்களின் எண்ணிக்கை 72.8 சதவீதமாக உள்ளது. கணித அறிவை பொருத்தவரை மாணவர்களை விட மாணவிகள் பின்தங்கி உள்ளனர். 44 மாணவிகளும், 50 சதவீதம் மாணவர்களும் மட்டுமே கணக்குகளை சரியாக போடுகிறார்கள்.

அதேசமயம், இமாச்சல பிரதேசம், பஞ்சாப், கேரளா, கர்நாடகா, தமிழகத்தை சேர்ந்த மாணவிகள் கணக்கில் சிறப்பாக உள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள 5.5 லட்சத்திற்கும் அதிகமான 3 முதல் 16 வயதுடைய பள்ளி மாணவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

3 comments:

  1. தினி வகுப்பு, தனிதனி ஆசிரியர் இல்லாமல் இருக்கும் போது இது போன்ற கணக்கு எடுப்பு இருந்து வருகிறது.... காரணம் ஒன்று முதல் ஐந்து வரை ஒரே வகுப்பு, ஒரே ஆசிரியர்..... இந்த நிலையை கொண்டு வந்து விட்டது அரசு.... கணக்கு போட்டும் சொல்லி விட்டு காமெடி பண்ஞது...நாம் அனைவரும் இந்த செய்தியை பய்த்தியகாரன்மாறி படிக்க வேண்டிய நிலை..... த்து......

    ReplyDelete
  2. அனைவருக்கும் பாஸ் திட்டம், அடிக்க கூடாது, திட்ட கூடாது, கத்தி எடுத்து குத்துனாலும் நெஞ்ச காட்டிட்டு நிக்கணும், அப்படி இருந்தா எப்படி பையன் படிப்பான், சும்மா அனைவருக்கும் கல்வின்னு அறிக்கை மட்டும் விட்டா போதுமா?? எப்படி செயல் படுத்தனும், அதுக்கு முக்கியத்துவம் குடுக்கலையே, வாத்தியாருக்கு மேல இருக்கவன் எல்லாம் கேள்வி மட்டுமே கேக்குறான், பிரச்சனைக்கான தீர்வு எவனுமே குடுக்குறது இல்லையே, அப்பறம் எப்படி எல்லாமே solve ஆகும், கண்டிப்பா ஆகாது, மாசத்துக்கு ரெண்டு மூணு திட்டம் போட்டுட்டு இருக்காங்க மத்திய மாநில அரசுல, ஒன்னு கூட கல்விக்கு முக்கியத்துவம் குடுக்கல, இலவச கல்வி அனைவருக்கும் தரமா குடுக்க வழி இல்ல, தனியார் கிட்ட குடுத்தாச்சு, சிறப்பா நடக்கட்டும்,

    ReplyDelete
  3. இவனுங்களையும் ஒன்னும் சொல்றதுக்கு இல்ல. இப்படி 16000 குடும்பத்தையும் நோகடிக்கவே இப்படி போஸ்டிங் போட்ட அந்த அம்மாவையும் ஒன்னும் சொல்றதுக்கு இல்ல. எல்லாருமே வயது அதிகமானவர்கள் அப்படின்னு தெரிஞ்சும் பிள்ளை குட்டிகள் அவர்களுக்கும் உண்டுன்னு தெரிஞ்சும் இப்படி 7700 ருபாய் மட்டும் கொடுத்து பகுதி நேரம் மட்டுமே வேலைன்னு சொல்லி முழு நேரம் மட்டுமல்லாது வீட்லயும் வேலை செய்ய சொல்லி இந்த தேதிக்குள் முடிக்க வேண்டும் அந்த தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று அணைத்து வேலைகளும் கணிப்பொறி மூலமாக முடித்து டிஜிட்டல் இந்தியாவாக மாற்ற நினைக்கிற கல்வித்துறை அதிகாரிகள் , முதன்மை கல்வி அதிகாரிகள் , மாவட்ட கல்வி அதிகாரிகள் , தலைமை ஆசிரியர்கள் என இவர்களுக்கும் எங்கள் கஷ்டம் தெரிவதில்லை. வேலையை குறிப்பிட்ட தேதிக்குள் முடிக்க குறிப்பிட்ட நாட்களுக்குள் முடிக்க மட்டுமல்லாது எங்களை 11 12 வகுப்பிற்கு பாடம் நடத்த மற்ற பள்ளிகளுக்கும் டெபுடேஷன் போடும்போது கண்களுக்கு தெரியும். மற்ற நேரங்களில் நாங்கள் திட்ட வேலை பணியாளர்கள். அப்படி என்னடா திட்டம்? எங்களுக்கு வயிறு உண்டுன்னு தெரிஞ்சும் எங்க வயித்துல அடிக்காதீங்க. பதினாறாயிரம் குடும்பங்களும் இதை நம்பி பட்டினி கெடக்குறோம். மனசாட்சி யோட எண்ணி பாருங்க. தனியாரை சொல்றேன்ங்க குறைந்த பட்ச ஊதியம் இவ்வளவு கொடுங்கன்னு. அதை விட நீங்க நர்ஸ் போலீஸ் என எல்லா போஸ்டிங் இப்படி போட்டு மொத்த பணத்தையும் வரின்னு பிடுங்கி.... அப்படியும் நிதி பற்றாக்குறை. அப்புறம் இத்தனை கோடி அங்க பிடிபட்டது இத்தனை கோடி இங்க பிடிபட்டது ன்னு செய்தி மட்டும் போடுறீங்க. இதெல்லாம் எப்புடி?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி