உலக நாடுகளின் தேசிய கொடியை காட்டி நாட்டை சரியாக கூறிய அரசு பள்ளி ஆசிரியையின் மகளுக்கு கலெக்டர் நேரில் வாழ்த்து - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 13, 2019

உலக நாடுகளின் தேசிய கொடியை காட்டி நாட்டை சரியாக கூறிய அரசு பள்ளி ஆசிரியையின் மகளுக்கு கலெக்டர் நேரில் வாழ்த்து



உலக நாடுகளின் தேசிய கொடியை அடையாளம் காட்டும் சிறுமிக்கு, கலெக்டர் நேரில் வாழ்த்து தெரிவித்தார்.

திருவண்ணாமலை அடுத்த எடப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார், 50; டூல்ஸ் வியாபாரி. இவரது மனைவி சுபஸ்ரீ, 38, அரசு பள்ளி ஆசிரியை. தம்பதியின் மகள் நிகிதா, 4, தனியார் பள்ளியில், யு.கே.ஜி., படிக்கிறார். இவர், உலக நாடுகளின் தேசிய கொடிகளை அடையாளம் காட்டியும், அந்த நாட்டின் பெயர், இந்திய நாட்டின் அனைத்து மாநில தலைநகரங்களின் பெயர்களையும் கூறி அசத்தி, அதன் வீடியோவை, சமூக வலைதளங்களில் பதிவிட்டார். மேலும், கலெக்டரை சந்திக்க விரும்புவதாகவும், தானும் கலெக்டராகி, தங்கள் பகுதியில் சாலை வசதி செய்து தருவேன் எனவும் கூறியிருந்தார்.

இதை, சமூகவலைதளங்களில் பார்த்த கலெக்டர் கந்தசாமி, நிகிதாவின் வீட்டிற்கு நேரில் சென்று, அவரை சந்தித்து, வாழ்த்து தெரிவித்தார். மேலும், டைரி, கலர் பென்சில், ஸ்கெட்ச், ஸ்வீட் மற்றும் பழங்கள்வழங்கி பாராட்டினார்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி