அபராதத்துடன் 7 லட்சம் பேர் வருமான வரி கணக்கு தாக்கல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 11, 2019

அபராதத்துடன் 7 லட்சம் பேர் வருமான வரி கணக்கு தாக்கல்


தமிழகத்தில் 50 ஆயிரம் பேர் உட்பட நாடு முழுவதும் ஏழு லட்சம் பேர் ஜனவரியில் அபராதத்துடன் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர்.கடந்த 2017 - 18ம் நிதியாண்டுக்கு அபராதமின்றி வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் 2018 ஏப்ரல் முதல் ஜூலை வரை வழங்கப்பட்டது.

பின் இந்த அவகாசம் ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டது.ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய் வருமான உச்சவரம்பை தாண்டும் அனைவரும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது அவசியம். வரி ஆதாய நடவடிக்கையில் ஈடுபட்டு வருமான வரி உச்சரவரம்புக்கு கீழ் வந்தாலும் கணக்கு தாக்கல் என்பது நடப்பு ஆண்டு முதல் கட்டாயமாகி உள்ளது.மேலும் உரிய நேரத்தில் கணக்கு தாக்கல் செய்ய தவறினால் டிசம்பர் வரை 5000 ரூபாய்; ஜனவரி முதல்10 ஆயிரம் ரூபாய் அபராதமும் செலுத்த வேண்டும். இதன்படி நாடு முழுவதும் ஜனவரி வரை 6.31 கோடி பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர். இது 2018 முடிவில் 6.24 கோடியாக இருந்தது.

கடந்த மாதத்தில் மட்டும் ஏழு லட்சம் பேர் கூடுதலாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர்.தமிழகத்தில் 2018 டிசம்பர் முடிவில் 42.43 லட்சமாக இருந்த வருமான வரி செலுத்தியோர் எண்ணிக்கை இந்தாண்டு ஜனவரி முடிவில் 50 ஆயிரம் அதிகரித்து 42.93 லட்சமாகி உள்ளது.

மேலும் மஹாராஷ்டிராவில் 99.83 லட்சம்; குஜராத்தில் 62 லட்சம்; உத்தரபிரதேசத்தில் 56.65 லட்சம்; மேற்குவங்கத்தில் 39.65 லட்சம்; ராஜஸ்தானில் 38.67 லட்சம் பேரும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி