தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டில் 8,9,10ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவசமாக ஸ்மார்ட் மடிக்கணினி: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 20, 2019

தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டில் 8,9,10ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவசமாக ஸ்மார்ட் மடிக்கணினி: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி



வரும் கல்வி ஆண்டு 8, 9, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவசமாக ஸ்மார்ட் மடி கணினி வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று நெல்லையில் அளித்த பேட்டி: இந்த ஆண்டு நீட் தேர்வுக்காக 16 ஆயிரம் மாணவர்களுக்கு அரசு மூலம் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.

இதில் அதிக மதிப்பெண் பெறும் 4 ஆயிரம் பேரை தேர்வு செய்து அவர்களுக்கு தனியாக 25 நாட்கள் பல்வேறு கல்லூரிகளில் முழுமையான பயிற்சி தரப்படும். ஜிஎஸ்டிக்கு நாம் 4ல் ஒரு பங்கு வரி செலுத்தவேண்டி உள்ளது. தற்போது இந்தியா முழுவதும் 2 லட்சத்து 85 ஆயிரம் ஆடிட்டர்கள் உள்ளனர். ஜிஎஸ்டி வரி வந்துள்ளதால் அவர்களின் தேவை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் வணிகவியல் படித்த 3 ஆயிரம் பேருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு புதிய ஆடிட்டர்கள் உருவாக்கப்படுவர்.

வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் பாடத்திட்டத்தில் திறன் மேம்பாட்டு கல்வி முறை கொண்டு வரப்படும். மேலும் இந்த ஆண்டு 1 முதல் 8 வரை படிக்கும் மாணவர்களுக்கு வண்ண சீருடை வழங்கப்படும். பிளஸ்-1. பிளஸ்-2 மாணவர்கள் 15 லட்சம் பேருக்கு இதுவரை லேப்-டாப் வழங்கப்பட்டுள்ளது. வரும் கல்வி ஆண்டில் 8, 9, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட் மடி கணினி வழங்கப்படும். கடந்த ஆண்டு 250 மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. தேவையான சென்டர்கள் இல்லாததால் வெளி மாநிலங்களுக்கு சென்று மாணவர்கள் எழுதினர்.

இந்த ஆண்டு 550 மையங்கள் உருவாக்கப்படும். தமிழக மாணவர்கள் இனி வெளிமாநிலங்களுக்கு செல்லவேண்டிய நிலை ஏற்படாது. இவ்வாறு அவர் கூறினார்.

8 comments:

  1. First +2 muducha last year students ke laptop kodukala ethula ethu Vera

    ReplyDelete
  2. Appadiye oru poison bottle vangi Kodi sappittu sagurom

    ReplyDelete
  3. +2 ku sona kudukala next teachers ku sona m ila ipa 8-10 ku..nee enaiku tholaiyiruyo anaikuthan tamilnadu vilangum..onu therinchko nee solratha nambi keka makal mutalkal ila..vati muthaluma serthu election la vaangapora..veetuku odapora..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி