கடந்த 2012 ஆம் வருடம் 16000 க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டனர் அவர்களில் சுமார் 200 மாற்றுத்திறனாளிகளும் அடங்குவர் மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு கடந்த 2008 ஆம் வருடம் அரசாணை எண் 151 யை பிறபித்துள்ளது.
அதில் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு காலமுறை ஊதியம் வழங்க ஆணையிடுகிறது ஆனால் அந்த அரசாணையை தமிழக அரசு நடைமுறைபடுத்தாமல் அந்த அரசு ஆணையை முடக்கி மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதார உரிமையை பறித்து வருகிறது இது புதிய மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016 ன் படி குற்றமாகும் சட்டத்தை மதித்து நடக்க வேண்டிய தமிழக அரசு மற்றும் உயர் அதிகாரிகள் சட்டத்தை மிதித்து நடக்கின்றனர் உடனே தமிழக அரசு அரசு ஆணை எண் 151 யை நடைமுறைபடுத்தி மாற்றுத்திறனாளிகளை வாழவைக்க முன்வர வேண்டும் இது பகுதிநேர மாற்றுத்திறன் ஆசிரிகளின் கனிவான கோரிக்கையாகும்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி