போலி வினாத்தாள், 'லீக்' போலீசில், சி.பி.எஸ்.இ., புகார் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 9, 2019

போலி வினாத்தாள், 'லீக்' போலீசில், சி.பி.எஸ்.இ., புகார்


போலியான வினா தாளை, 'லீக்' செய்து, குழப்பும் இணையதளங்கள் மீது, கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்'என, போலீசிடம், சி.பி.எஸ்.இ., புகார் அளித்துள்ளது.

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நேற்று வெளியிட்ட செய்திகுறிப்பு:

பிளஸ் 2 மற்றும் 10ம்வகுப்பு பொது தேர்வுகள், பிப்., 15ல் துவங்கின. இதுவரை, 167 பாடங்களுக்கு தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இதில், எந்த முறைகேடுகளும் இன்றி, தேர்வுகள் முடிந்துள்ளன.ஆனால், மாணவர்களையும், பெற்றோரையும் குழப்பும் வகையில், இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில், தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன.ஒரு வாரத்துக்கு முன், போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மார்ச், 7ல், 10ம் வகுப்புக்கு கணித தேர்வு நடந்தது; அதிகபட்சமாக, 19 லட்சம் மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். ஆனால், தேர்வுக்கு முன், இணையதளங்களிலும், சமூக வலைதளங்களிலும், போலியான வினா தாள்களை, 'லீக்' செய்து, மாணவர்களையும், பெற்றோரையும் ஒரு கும்பல் குழப்பி வருகிறது.

அவர்கள் மீது, கிரிமினல் நடவடிக்கை எடுக்க, டில்லி போலீசில் இன்னொரு புகார் அளிக்கப்பட்டு உள்ளது. எனவே, தேர்வுகள் முடியும் வரை, மாணவர்களும், பெற்றோரும் தேவையற்ற வதந்திகளுக்கு இடம் தர வேண்டாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி