கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தவறி, வரும் ஜுன் மாதம் நடைபெறவுள்ள சிறப்பு துணைப் பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித்தேர்வர்கள் ஏப்.8 முதல் ஏப்.12-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வு சேவை மையங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
2019-2020-ஆம் கல்வியாண்டு முதல் செப்டம்பர்,அக்டோபர் பருவ துணைத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதால் மார்ச் 2019 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்களுக்கு ஜுன், ஜுலையில் நடைபெறும் சிறப்பு துணைப் பொதுத் தேர்வெழுத வாய்ப்பு வழங்கப்படுகிறது.
தனித்தேர்வர்கள் அவரவர் விண்ணப்பிக்கும் கல்விமாவட்டத்தில் அமைக்கப்படும் தேர்வு மையத்தில் மட்டுமே தேர்வெழுத அனுமதிக்கப்படுவர். தேர்வுக்கான கட்டணமாக ஆன்லைன் பதிவு உள்பட ரூ.175 செலுத்த வேண்டும்.
மேற்குறிப்பிட்ட தேதிகளில் விண்ணப்பிக்கத் தவறும் தேர்வர்கள் சிறப்பு அனுமதித் திட்டத்தில் ஏப்.23, ஏப்.24 ஆகிய தேதிகளில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.
மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள், சிறப்புத் துணைத் தேர்வு குறித்த கூடுதல் விவரங்கள் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் இடம்பெற்றுள்ளன என அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி