ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஜே.இ.இ. மெயின் தேர்வு முடிவுகள் மற்றும் தரவரிசைப் பட்டியல் ஏப்ரல் 30ஆம் தேதி இன்று வெளியாக உள்ளது. மாணவர்கள் இதனை jeemain.nic.in. என்ற ஜேஇஇ.,யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
ஐஐடி, என்.ஐ.டி போன்ற பிரபலமான உயர்கல்வி நிறுவனங்களில் பொறியியல், கட்டிடக்கலை போன்ற துறைகளில் பட்டப்படிப்பை மேற்கொள்ள நடத்தப்படும் பொத நுழைவுத் தேர்வு ஜே.இ.இ. (JEE) எனப்படும் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு (Joint Entrance Examination). இதனை என்.டி.ஏ. எனப்படும் தேசிய தேர்வுகள் ஏஜென்சி நடத்துகிறது.
ஜே.இ.இ மெயின் 1 (JEE Main 1) மற்றும் ஜே.இ.இ மெயின் 2 (JEE Main 2) என இத்தேர்வு இரண்டு கட்டமாக நடத்தப்படும். இந்த இரு தேர்வுகளை எழுதியவர்கள் எந்தத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுகிறார்களோ அதனை அடிப்படையாக வைத்து தரவரிசை பட்டியல் தயாரிக்கப்படும். இந்த ஆண்டு ஜனவரில் நடந்த ஜே.இ.இ மெயின் 1 (JEE Main 1) தேர்வை 6.69 லட்சம் பேர் எழுதினர். இவர்களில் 75% பேர் ஜே.இ.இ மெயின் 2 (JEE Main 2) தேர்வையும் எழுத விண்ணப்பித்தனர். ஜே.இ.இ மெயின் 2 (JEE Main 2) தேர்வு ஏப்ரல் 7 முதல் 12 வரையில் நடைபெற்றது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி