பகுதி நேர பி.இ. சேர்க்கை: மே 6 முதல் விண்ணப்பிக்கலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 4, 2019

பகுதி நேர பி.இ. சேர்க்கை: மே 6 முதல் விண்ணப்பிக்கலாம்


பகுதி நேர பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர்க்கை பெற வரும் 6 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மூன்று ஆண்டு பட்டயப் படிப்பு முடித்து, குறைந்தபட்சம் 2 ஆண்டுகளாகப் பணிபுரிந்து கொண்டிருப்பவர்கள் மட்டுமே இந்த பகுதி நேர பி.இ. படிப்புக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.
இதுகுறித்த தமிழக அரசின் அறிவிப்பு:
கோவை, சேலம், திருநெல்வேலி, காரைக்குடி, வேலூர், பர்கூர் அரசு பொறியியல் கல்லூரிகள், கோவை தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (சிஐடி), கோவை பி.எஸ்.ஜி. பொறியியல் கல்லூரி, மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி ஆகிய 9 கல்லூரிகளில் பகுதி நேர பி.இ., பி.டெக். படிப்புகள் வழங்கப்படுகின்றன.

இந்தக் கல்லூரிகளில் 2019-20-ஆம் கல்வியாண்டு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிப்பவர்கள் பட்டயப் படிப்பு முடித்து இரண்டு ஆண்டுகள் முழுமையாக நிறைவு பெற்றிருக்க வேண்டும். அதோடு, பணிபுரிபவராகவும், குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தவராகவும் இருக்க வேண்டும்.
இதற்கு மே 6-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க ஜூன் 4 கடைசி நாளாகும். விண்ணப்பதாரர்கள் விவரங்களை ஆன்-லைனில் பதிவு செய்து, அதைப் பதிவிறக்கம் செய்து, விண்ணப்பக் கட்டணத்துக்கான வரைவோலையுடன் செயலர், பகுதி நேர பி.இ., பி.டெக். சேர்க்கை, கோவை தொழில்நுட்ப கல்லூரி, கோவை என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.ptbe-tnea.com என்ற இணையதளத்தில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி