ஐ.டி.ஐ.,க்களில் சேர ஜூன் 27 வரை அவகாசம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 20, 2019

ஐ.டி.ஐ.,க்களில் சேர ஜூன் 27 வரை அவகாசம்


தமிழகம் முழுவதும் அரசுமற்றும் தனியார் ஐ.டி.ஐ., தொழிற்பயிற்சி மையங்களில் சேர ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தேதி ஜூன் 27 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 87 அரசு ஐ.டி.ஐ.,களும், 476 தனியார் ஐ.டி.ஐ.,களும் உள்ளன. இவற்றில் சேர்வதற்கு பத்தாம் வகுப்பு தான் கல்வித் தகுதி மோட்டார் மெக்கானிக், பிட்டர், டர்னர் என 63 தொழிற்படிப்புகள் உள்ளன.ஐ.டி.ஐ.,படிப்புகளில் மாணவர் சேர்க்கையை ஊக்குவிக்க, இலவச பஸ் பாஸ்,லேப்டாப், மாத உதவித்தொகை ரூ.500, சீருடைகள், பயிற்சி புத்தகங்கள், வரை கருவிகளை இலவசமாக வழங்குகிறது.

மாணவிகளுக்கு 30 சதவீத இடஒதுக்கீடும்உள்ளது. ஐ.டி.ஐ.,யில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்க, ஜூன் 15 வரை கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அதை ஜூன் 27 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது, என தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் ஜோதிநிர்மலாசாமி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி