தமிழகத்தில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில், 1.72 லட்சம் இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு, இன்று(ஜூன் 20) தரவரிசைபட்டியல் வெளியிடப்படுகிறது.
அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, தமிழக உயர் கல்வி துறையின் சார்பில், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.
மொத்தம், 1.33 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்தனர். அவர்களில், 1.04 லட்சம் பேர் மட்டும், அசல் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றுள்ளனர். அவர்களுக்கான தரவரிசை பட்டியல், இன்றுவெளியிடப்பட உள்ளது.மாணவர்களின், 'கட் ஆப்' மதிப்பெண் அடிப்படையில், ஒட்டுமொத்த தரவரிசையும், ஜாதி வாரி தர வரிசையும், இந்த பட்டியலில் இடம்பெறும்.
கவுன்சிலிங் நடவடிக்கைகள், வரும், 25ம் தேதி துவங்குகின்றன. பொது பாட பிரிவு மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு கவுன்சிலிங், ஜூலை, 3 முதல், 30 வரை, 'ஆன்லைன்' வழியே நடத்தப்பட உள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி