விரைவில் போராட்டம் - ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 24, 2019

விரைவில் போராட்டம் - ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர் அறிவிப்பு


''அரசு பள்ளிகளில், அடிப்படை வசதிகளை சரி செய்யக் கோரி, விரைவில் போராட்டம் நடத்தப்படும்,'' என, 'ஜாக்டோ - ஜியோ' ஒருங்கிணைப்பாளர் தாஸ் தெரிவித்தார்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் அவர் கூறியதாவது:ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் உயர்மட்டக் குழு கூட்டம், ஜூன், 30ல், சென்னையில் நடக்கிறது. அரசு வேண்டுகோளை ஏற்று, போராட்டத்தை கைவிட்டு பணிக்குச் சென்றோம். அரசு ஊழியர், ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்.

ஜெ., முதல்வராக இருந்த போது, போராட்டம் நடத்தியவர்கள் மீதான நடவடிக்கை, ரத்து செய்யப்பட்டது. அரசு பள்ளிகளில், தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது. மதுரை மாவட்டத்தில், அரசு பள்ளிகளுக்கு தேவையான புத்தகங்கள் வழங்காமல் உள்ளனர். இவற்றை சரி செய்ய வேண்டும்; தவறினால், போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி