மாவட்ட கல்வி அதிகாரிகள், ஏழு பேருக்கு, முதன்மை கல்வி அதிகாரிகளாக, பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
மாவட்ட கல்வி அதிகாரி என்ற, டி.இ.ஓ.,க்கள் ஏழு பேருக்கு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி என்ற, சி.இ.ஓ., பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை, பள்ளி கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் பிறப்பித்துள்ளார்.
1.நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி மாவட்ட கல்வி அலுவலராக இருந்த எ.தியாகராஜன், திருவாரூர் முதன்மை கல்வி அலுவலராகவும்,
2.புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் கே.குணசேகரன், நாகப்பட்டினம் முதன்மை கல்வி அலுவலராகவும்,
3.திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு மாவட்ட கல்வி அலுவலர் முத்துகிருஷ்ணன், கரூர் முதன்மை கல்வி அலுவலராகவும் நியமனம் செய்யப்படுகிறார்கள்.
4.தேனி மாவட்ட கல்வி அலுவலர் பி.என்.கணேஷ், திருநெல்வேலி முதன்மை கல்வி அலுவலராகவும்,
5.சென்னை (மேற்கு) மாவட்ட கல்வி அலுவலர் பி.எ.ஆறுமுகம், கடலூர் முதன்மை கல்வி அலுவலராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
6.விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை மாவட்ட கல்விஅலுவலர் எம்.ரத்தினச்செல்வி, தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரசுவதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மையத்தின் நிர்வாக அலுவலராக நியமனம் செய்யப்படுகிறார்.
7.தர்மபுரி மாவட்டம், அரூர் மாவட்ட கல்வி அலுவலர் கே.சுப்பிரமணி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் துணை இயக்குனராக நியமிக்கப்படுகிறார்.
இந்த அரசாணை உடனடியாக நடைமுறைக்கு வருகிறது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
So happy all the best pls give me reputation or transfer to my district iam suffering with out my salary
ReplyDelete