பள்ளிக் கல்வித் துறை வளாகத்தில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகம் முன்பு தையல்,ஓவியம், இசை ஆகிய பிரிவுகளில் தேர்ச்சி பெற்று இன்னும் பணி நியமனம் வழங்கப்படாததைக் கண்டித்து பாதிக்கப்பட்டவர்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம்நடத்தினர்.
சிறப்பாசிரியர்களுக்கான உடற்கல்வி, இசை, ஓவியம், தையல் ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் 1,300 பேரை நியமனம் செய்வதற்கான போட்டித் தேர்வு 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது.இந்தத் தேர்வினை 30 ஆயிரம் பேர் எழுதினர். அவர்களில் தகுதி வாய்ந்தவர்களின் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் 2018-ஆம் ஆண்டு வெளியிட்டது.
ஆனால், இதுவரை அவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படவில்லை.எனவே, தங்களுக்குப் பணி நியமனம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது, தங்களுக்குப் பணி நியமனம் வழங்க வேண்டி பல்வேறு முறை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி உள்ளோம். ஆனால், இதுவரை பணி வழங்கவில்லை. இந்த முறையாவது பணி வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
எந்த தேர்வுக்கு எல்லாம் rescan செய்யப்பட்டு, முறைகேட்டாளர்கள் நீக்கப்பட்டார்களோ
ReplyDeleteஅதற்கெல்லாம் போஸ்டிங் போடாமல் இழுத்தடிக்கப்படுகிறது
1)TET 2017 -இரண்டாம் கட்ட தேர்வு
2)Polytechnic- court case இவர்களே போட்டு, அதையே காரணம் காட்டி தள்ளிவைப்பு
3)special teacher - court case காரணம் சொல்லப்படுகிறது
ஒருவேளை.. முறைகேட்டாளர்களை உள்ளே விட்டிருந்தால் இந்நேரம் அரசு துரிதமாக வேலை கொடுத்திருக்கும்
example... PGTRB 2017
Very worst Trb board
DeleteTet 2013,2017 poradinal nalla
ReplyDelete