பள்ளிகளில், 60 மாணவர்களுக்கு மேல் இருந்தால், இரண்டு வகுப்பாக பிரித்து கொள்ள, பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில், மத்திய - மாநில அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, விதிகள் பின்பற்றப்படுகின்றன. இதன்படி, ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, 35 மாணவர்களுக்கு, ஒரு ஆசிரியர், பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல், ஆறு முதல், பிளஸ் 2 வரை, 40 மாணவர்களுக்கு, ஒரு ஆசிரியர் என்ற வகையிலும், பாட வாரியாக, ஒவ்வொரு பாடத்துக்கும், தனித்தனி ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், புதிய கல்வி ஆண்டு பிறந்துள்ளதால், ஒவ்வொரு பள்ளியிலும், ஒரு வகுப்பில், 60 மாணவர்களுக்கு மேல் இருந்தால், அந்த வகுப்பை இரண்டாக பிரித்து கொள்ள, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.'மாணவர்களை இரண்டு வகுப்பாக பிரிக்கும் போது, ஆசிரியர்கள் ஒவ்வொரு வகுப்புக்கும், தனித்தனியே பாடம் நடத்தும் வகையில், பாட வேளைகளை நிர்ணயிக்க வேண்டும்' என, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி