8,179 அரசு மற்றும் அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளிகளில், பயோ மெட்ரிக் வருகை பதிவு விரிவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 24, 2019

8,179 அரசு மற்றும் அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளிகளில், பயோ மெட்ரிக் வருகை பதிவு விரிவு!


தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளிகளிலும் பயோ மெட்ரிக் வருகை பதிவு அமல்படுத்தப்படுகிறது.

தமிழகத்தில்  அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் வருகையை உறுதிசெய்ய, பயோ மெட்ரிக் வருகைப்பதிவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

அரசு உயர், மேல்நிலைப்பள்ளிகளில் தற்போது அமல் படுத்தப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, மாநிலம் முழுவதும் உள்ள 8,179 அரசு மற்றும் அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளிகளில், பயோ மெட்ரிக் வருகை பதிவு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதற்காக 413 வட்டார கல்வி அலுவலர்களுக்கு, கூரியர் மூலம் பயோமெட்ரிக் கருவிகள் அனுப்பப்பட்டுள்ளது. இதனிடையே, இதனை பொருத்துவது குறித்தும், செயல்பாட்டிற்கு கொண்டுவருவது குறித்தும் பயிற்சியளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: தற்போது வழங்கப்படும் கருவிகளுக்கு, வட்டார கல்வி அலுவலர்கள் தங்களது ஆளுகைக்குட்பட்ட பள்ளிகளில், கணினி இயக்க தெரிந்த பணியாளர்களை தேர்ந்தெடுத்து, அவர்கள் மூலமாக பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிற்சி முடித்தவர்கள் ஏதேனும் ஓரிரு பள்ளிகளில் மட்டுமே பயோ மெட்ரிக் பொருத்த உதவிபுரிவார்கள் இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி