பாடப் புத்தகத்தில் தமிழ் மொழி குறித்த அச்சுப் பிழை  சரிபார்க்க தவறியவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்  - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 29, 2019

பாடப் புத்தகத்தில் தமிழ் மொழி குறித்த அச்சுப் பிழை  சரிபார்க்க தவறியவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அமைச்சர் செங்கோட்டையன் தகவல் 


பிளஸ் 2 பாடத்திட்டத்தில் தமிழ் மொழி குறித்த அச்சுப் பிழையை சரிபார்க்கத் தவறியவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். வேலூர் மக்களவைத் தொகுதிக் கான தேர்தல் பிரச்சாரம் நடந்து வருகிறது.

இதில், வேலூர் சட்டப்பேரவை தொகுதியின்அதிமுக தேர்தல் பணிக் குழு பொறுப்பாளராக நியமிக்கப் பட்டுள்ள தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டை யன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். வேலூர் கொசப்பேட்டை பகுதியில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்ட அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘தமிழகத்தில் 12-ம் வகுப்பு பாடப் புத்தகத்தில்தமிழ் மொழி வரலாறு குறித்து தவறான தகவல் அச்சிடப்பட்டிருந்தது. அது அச்சுப்பிழைதான். அதை திருத்தம் செய்ய அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதை சரி பார்க்க தவறியவர்களுக்கு விளக் கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப் பட்டுள்ளது.

இனி வரும் காலங்களில் பாடத்திட்டங்களில், இது போன்ற தவறுகள் ஏற்படாமல் இருக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளும். வரும் காலங் களில் தவறுகள் ஏதாவது நடந் தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பயோமெட்ரிக் திட் டத்தை நிக் நிறுவனம் நாடு முழு வதும் செயல்படுத்தி வருகிறது. சாப்ட்வேரில் ஏற்பட்ட சிறு தவறால் இந்தி மொழி வெளியானது. குறைகள் தெரியவந்த மூன்றுநாட்களில் அதை மாற்றிவிட்டோம். தமிழகத்தில் இரு மொழிக்கொள்கை மட்டும்தான் கடைபிடிக்கப்படும். யாரும் யாரையும் சூழ்ச்சி செய்ய முடி யாது. இந்தியாவில் உள்ள மற்ற எல்லோரைக் காட்டிலும் தமிழ கத்தில் இருப்பவர்கள் தெளிவான வர்கள். நம் மக்களை யாரும் ஏமாற்றி விட முடியாது’’ என்றார்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி