பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று செய்தியாளர்களிடம் கூறிய புதிய அறிவிப்புகள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 11, 2019

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று செய்தியாளர்களிடம் கூறிய புதிய அறிவிப்புகள்!


பாடப்புத்தகங்கள் இல்லாமல் கையடக்க கணினி மூலம் படிக்கும் வசதியை மாணவர்களுக்கு வழங்க இருக்கிறோம் என்றும், முதற்கட்டமாக கையடக்க கணினி 15 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது என்றும் அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.523 ஆசிரியர்களுக்கு புதுமை ஆசிரியர் விருது வழங்கும்விழா சென்னை சேத்துப்பட்டில் உள்ள எம்.சி.சி. மேல்நிலைப்பள்ளியில் நேற்று மாலை நடைபெற்றது.

விழாவுக்கு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமை தாங்கினார். இதில் பள்ளிக்கல்வி துறை செயலாளர் பிரதீப் யாதவ், இயக்குனர் கண்ணப்பன் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் புத்தாக்க நூலை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார். பின்னர், ஆசிரியர்களுக்கு விருதுக்கான பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

அதைத்தொடர்ந்து அவர் பேசியதாவது:-ஒவ்வொரு மாணவ-மாணவிகளும் சிறந்த கல்வியை பெற வேண்டும் என்ற நோக்கில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. மொழிகள் படிப்பை படிப்பதற்கும், தெரிந்து கொள்வதற்கு மட்டும் தான் தேவைப்படுகிறது.மாணவர்களின் திறமையையும், ஆற்றலையும் வளர்த்து கொள்ள ஆசிரியர்களின் ஆற்றலும், சிந்தனையும் தேவை. அது தமிழகத்தில் சரியாக கிடைக்கிறது. மாணவர்கள் தங்களுடைய எதிர்காலத்தை எந்த தயக்கமும் இல்லாமல் அமைத்து கொள்ளலாம்.இந்தியாவில் என்ஜினீயரிங் படித்த ஏறத்தாழ 8 லட்சம் பேர் வேலையில்லாமல் உள்ளனர்.

அதேபோல், தமிழகத்தில் என்ஜினீயரிங் படித்த ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். திறன்மேம்பாடு எப்போது உயருகிறதோ? அப்போது தான் தமிழகத்தில் அத்தனை பேருக்கும் வேலைவாய்ப்புக்கான உத்தரவாதம் கிடைக்கும். பின்லாந்தில் கல்வி சார்ந்த திறன்மேம்பாடுகளை கற்றுத்தருகிறார்கள். அதை தொடர்ந்து தான் தமிழகத்தில் இந்த பணிகளை மேற்கொள்ள இருக்கிறோம்.அரசும், ஆசிரியர்களும் நினைத்தால் ஒரு மாணவரை கோபுரத்தில் உட்கார வைக்க முடியும்.

இந்த அரசு 15 லட்சத்து 40 ஆயிரம் மடிக்கணினிகள் ஒரே ஆண்டில் வழங்கி இருக்கிறது. வருகிற செப்டம்பர் மாதம் 15-ந்தேதிக்குள் 9, 10, 11, 12-ம் வகுப்புகள் கணினி மயமாக்கப்பட்டு, இணையதள வசதி கொடுக்கப்படும்.

மாணவ-மாணவிகளின் எதிர்காலத்தை மனதில் கொண்டு, ஒவ்வொரு மாணவருக்கும் கையடக்க கணினி (டேப்) இலவசமாக வழங்குவதற்கு இந்த அரசு திட்டமிட்டு இருக்கிறது.இதன் மூலம் பாடப்புத்தகங்கள் இல்லாமல் ‘கியூ ஆர் கோடு’ மற்றும் ‘பி.டி.எப்’ வடிவில் பதிவிறக்கம் செய்து படிக்கும் வசதி கொண்டு வரப்பட உள்ளது. 15 லட்சம் மாணவர்களுக்கு இந்த வசதி கிடைக்க வழிவகை செய்யப்பட்டு வருகிறது.

6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் வகுப்பறைகள் வருகிற செப்டம்பர் மாதம் 15-ந்தேதிக்குள்‘ஸ்மார்ட்’ வகுப்புகளாக மாற்றப்படும். நம்முடைய கல்வி முறை இந்தியாவிலேயே பெரிய மாற்றத்தை கொண்டு வரும்.

கல்வி சேனல் மிக விரைவில் முதல்-அமைச்சர் கரங்களால் திறந்து வைக்கப்பட உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சி முடிந்ததும் அமைச்சர் செங்கோட்டையனிடம், ‘எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகால அட்டவணை எப்போது வெளியிடப்படும்’ என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ‘பொதுத்தேர்வு அட்டவணை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் 4 நாட்களில் கால அட்டவணை வெளியிடப்படும்’ என்றார்.

17 comments:

  1. இன்னுமா இந்த உலகம் நம்புது!

    ReplyDelete
  2. இன்னுமா இந்த உலகம் நம்புது!

    ReplyDelete
  3. தமிழகத்தின் கல்வித்தரம்
    ஆசிாியா் பணியிட ஒழிப்பு
    நடவடிக்கை காரணமாக
    அதள பாதாளத்திற்கு
    செல்லப்போகிறது,
    இதை எதிா்த்து குரல் கொடுக்க யாருமில்லை ஆசிாியா்கள் உட்பட...

    ReplyDelete
  4. Computer kuduga Ava pathi velaiku sale pandra .
    Computer teacher potu adhuku teach panadhana.

    ReplyDelete
  5. Please give me transfer or deputation iam at home without salary and teaching lalithaa ammaiyappan thiruvarur native place nilgiris ph no 6374719193 or 9842968967 I believe kalviseithi

    ReplyDelete
  6. High school and higher secondary schools calculate teacher and pupils ratio separately for Tamil and English medium but in elementary school

    ReplyDelete
  7. வெறும் அறிக்கை மட்டுமே....no action.....

    ReplyDelete
  8. Tab laptop idhula kodukarapa online use pandraga unsafe site use panadhaadhiri kuduga then all school lap top and tabs ip address yelam government control la onnu irukatum then students laptop sale pana yedhachum fine amount are vera action yedukalam because lap top la unwanted site neraya students pakaraga then vera person kita low cost la sale paniraga so adha silar vagi miss use pandraga idhala panama students ku laptop tab kudutha adhu avagaluku help ah illama problem ah dha irukum

    ReplyDelete
  9. India ve thirumpi paakuthu intha poyan fraud peachala..

    ReplyDelete
  10. மாணவர்களின் கண்களை பற்றி எல்லாம் இவர்கள் கவலை கொள்வதாக தெரிய வில்லை சீக்கிறத்தில் 6 ஆம் வகுப்பு முதலே மாணவர்கள் கண்ணாடி அணிய ஆரம்பித்து விடுவார்கள் பாவம் இம் மாணவர்களின் எதிர் காலம்

    ReplyDelete
  11. كاسر بروكسي

    فتح المواقع المحجوبه

    موقع دوس بروكسي سهل الاستخدام لكل زوارنا , كل ما عليك هو فتح موقعنا , قم بكتابة عنوان الموقع الإلكتروني المراد تصفحه وسوف يقوم دوس بروكسي بتشفير الإتصال الخاص بك فوراً , لا تحتاج لتثبيت برامج او استخدام تطبيقات ، حيث يمكنك من استخدامه علي جميع الهواتف الذكية وكذلك جهاز الكمبيوتر الخاص بك.

     

    ReplyDelete
  12. Paithiyama pidichrum namakku hyo sami mudiala arikkai adikadi arikkai

    ReplyDelete
  13. Kadavule ennathan nadakuthu.BT teachers into pg ku poda poranga apram yethuku trb exam.ug trb ennachu onnume puriyala kaththirunthu kaththirunthu kaalangale poiduchu.ithukku our mudivu illaya

    ReplyDelete
  14. Arikkaigal mattumae palapalappaagae ulladhu, ullukkul aththanaiyum poi,poi, poi....

    ReplyDelete
  15. Puthusa thittam pottu kajanava Kai seium Vela ethu Vera onum Ella.......

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி