புதிய மாவட்டங்களாக உருவாகும் செங்கல்பட்டு, தென்காசிக்கு தனி அதிகாரிகள் நியமனம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 27, 2019

புதிய மாவட்டங்களாக உருவாகும் செங்கல்பட்டு, தென்காசிக்கு தனி அதிகாரிகள் நியமனம்


நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத் தொடரில், நெல்லை மாவட்டத்தை பிரித்து தென்காசியையும், காஞ்சீபுரம் மாவட்டத்தை பிரித்து செங்கல்பட்டையும் தலைமை இடங்களாக கொண்டு தனி மாவட்டங்கள் உருவாக்கப்படுவதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இந்தநிலையில், தென்காசி, செங்கல்பட்டு மாவட்ட உருவாக்கத்துக்கான தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இதுதொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாடு சர்க்கரை கூடுதல் இயக்குனர் ஜி.கே.அருண் சுந்தர் தயாளன் செங்கல்பட்டு மாவட்டஉருவாக்கத்திற்கான தனி அதிகாரியாக மாற்றப்பட்டுள்ளார். காஞ்சீபுரம் மாவட்டத்தை பிரிக்கும் பணியில் வருவாய் நிர்வாக ஆணையருக்குஅவர் உதவி செய்வார்.

தமிழ்நாடு கடல்சார் வாரிய துணை தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான ஏ.ஜான் லூயிஸ், தென்காசி மாவட்ட உருவாக்கத்திற்கான தனி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தை பிரிக்கும் பணியில் வருவாய் நிர்வாகஆணையருக்கு அவர் உதவி புரிவார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி