இரட்டிப்பாகும் பசுமைப்படை பள்ளிகள்: மத்திய அரசு திட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 18, 2019

இரட்டிப்பாகும் பசுமைப்படை பள்ளிகள்: மத்திய அரசு திட்டம்


தேசிய பசுமைப்படை செயல்படும் பள்ளிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்த, பள்ளிகளில், தேசிய பசுமைப்படை மற்றும்சூழல் அமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவ -- மாணவியரை உறுப்பினர்களாக உடைய இந்த அமைப்புகள், சிறப்பாக செயலாற்ற, பள்ளிஅளவில் பொறுப்பாசிரியரும், கல்வி மாவட்ட அளவில் ஒருங்கிணைப்பாளரும் நியமிக்கப்படுகின்றனர்.

தற்போதைய நிலையில், மாவட்ட அளவில், 250 பள்ளிகளில், பசுமைப்படை மற்றும் சூழல் அமைப்புகள் உள்ளன.தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது:தற்போது, சுற்றுச்சூழல் மற்றும் பசுமை சார்ந்த விஷயங்களில், மத்திய அரசு, கூடுதல்கவனம் செலுத்தி வருகிறது.மழைநீர் சேகரிப்பு, மரக்கன்று நடும் திட்டம் என, பல விஷயங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன.அந்தந்த மாவட்டங்களில் உள்ள சுற்றுச்சூழல் சார்ந்த விஷயங்களை, பசுமைப்படை மற்றும் சூழல் அமைப்புகளில் இணைந்துள்ள மாணவர்களுக்கு உணர்த்தி, அவர்கள் வழியாக, சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த,அரசு ஊக்குவிப்புவழங்குகிறது.

தேசிய பசுமைப்படை சார்பில், பள்ளிகள்தோறும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை உருவாக்குவது, மண்ணுக்கேற்ற மரம் வளர்த்து, பள்ளி வளாகங்களில் பசுமை போர்வை உருவாக்குவது, மூலிகை தாவரங்களை வளர்ப்பது போன்ற பணிகளை செய்ய வேண்டும் என, பள்ளிக்கல்வித் துறை சார்பில், சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டுள்ளது.மாவட்ட வாரியாக, கூடுதலாக, 250 பள்ளிகளில், பசுமைப்படைமற்றும் சூழல் அமைப்புகள் அமைக்க,மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி