அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச நாட்குறிப்பு  - பள்ளிக்கல்வித்துறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 29, 2019

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச நாட்குறிப்பு  - பள்ளிக்கல்வித்துறை


தமிழக பள்ளிக் கல்வியின் கீழ் இயங்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகங் கள், சீருடை, மிதிவண்டி, செருப்பு, மடிக்கணினி உட்பட பல்வேறு விதமான இலவச பொருட்கள் அரசு சார்பில் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச நாட் குறிப்பு (டைரி) வழங்கவும் கல்வித் துறை முடிவு செய்துள் ளது.

இதுகுறித்து கல்வித் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘தனியார் பள்ளிகளை போல அரசு, அரசு உதவி பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் 56 லட்சம் மாணவர்களுக்கு நாட்குறிப்பு அளிக்கப்பட உள்ளது.இதன்மூலம் மாணவர்களின் தினசரி வகுப்பறை நடவடிக்கை, கற்றல் திறன் குறித்த தக வல்கள் பெற்றோர்களுக்கு தெரி யப்படுத்தப்படும்.

இது ஆசிரியர், பெற்றோர் களுக்கு இடையே தகவல் தொடர்பை ஏற்படுத்த உதவும். முதல் 2 பக்கங்கள் மாண வர்களின் தனிபட்ட விவரங்கள் எழுதிக் கொள்ளலாம். தமிழ், ஆங்கிலத்தில் நாட்குறிப்பு அச் சிடப்படும். இதை தினமும் மாண வர்கள் பள்ளிக்கு கொண்டுவர அறிவுறுத்தப்படுவர்’’ என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி