தனியார் பள்ளிகள் தொடங்க தமிழகத்தில் இனி கெடுபிடி - அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 6, 2019

தனியார் பள்ளிகள் தொடங்க தமிழகத்தில் இனி கெடுபிடி - அமைச்சர் செங்கோட்டையன்


இனிதீவிர பரிசீலனைக்கு பின்னரே தனியார் பள்ளிகள் தொடங்க அங்கீகார‌ம் அளிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சிறப்பாக செயல்பட்ட ஆசிரி‌யர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது.

விழாவில் தொடக்க கல்வி ஆசிரியர்கள், மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் உள்பட 377‌ பேருக்கு விருது வழங்கப்பட்டது. விழாவின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தீவிர பரிசீலனைக்கு பின்னரே தனியார் பள்ளிகள் தொடங்க அனுமதி‌ வழங்கப்படும் என பேசினார்.

மேலும் பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் போர்ட் முறையில் பாடம்‌ கற்பிக்கப்படும் என அமைச்சர் கூறினார். அரசின் நடவடிக்கைகள் கா‌ரணமாக தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகளில் மாணவ சேர்க்கை அதிகமாகும் என‌வும் அவர் ‌நம்பிக்கை தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி