ஆசிரியர்களின் சொத்து விபரம் கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 5, 2019

ஆசிரியர்களின் சொத்து விபரம் கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும்


ஆசிரியர்களின் சொத்து விபரத்தை, பணிப் பதிவேட்டில் முறையாக பராமரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு, சம்பந்தப்பட்ட பள்ளிகளில், பணிப் பதிவேடு பராமரிக்கப்படுகிறது. தற்போது, 'டிஜிட்டல்' மயமாக்கப்பட்டு, கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.அதில் பலரும், தங்கள் சொத்து விபரத்தை, முழுமையாக பதிவு செய்யாமல், அலட்சியம் காட்டுவதாக, புகார் எழுந்தது. இதையடுத்து, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:பள்ளி கல்வித் துறையில் பணிபுரியும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், பணியாளர்கள் தங்களின் அசையும் மற்றும் அசையா சொத்து விபரத்தை, பணிப் பதிவேட்டில் முறையாக பதிவு செய்ய வேண்டும்.

ஏதேனும் முரண்பாடு இருந்தால், ஊழல் மற்றும் கண்காணிப்புத்துறை அறிக்கைப்படி, சம்பந்தப்பட்ட அலுவலர் மீது, துறை ரீதியான, ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி