அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்றல் செயல்பாடு களை செல்லிடப்பேசி செயலி மூலம் கண்காணிக்க பள்ளிக் கல்வித் துறைமுடிவு செய்துள்ளது.
இந்த செயலி முதல்கட்டமாக சென்னை, திருவண்ணாமலை மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. , தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்தும் வகை யில் பள்ளிக் கல்வித்துறை பல்வேறு தொழில் நுட்பங்களைப் பயன்ப டுத்திவருகிறது. இதற்காக மாநிலப் பாடத்திட்டத்தின் கற்றல் முறைக ளில் பல்வேறு விதமான மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் அரசுமற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசி ரியர்கள் வகுப்பறைகளில் எவ்வாறு பாடம் நடத்துகின்றனர் என்பதை செல்லிடப்பேசி செயலி மூலம் கண்காணிக்கும் முறையை கல்வித் துறை கொண்டுவர திட்டமிட்டுள்ளது. முதல்கட்டமாக சோதனை முறையில்சென்னை, திருவண்ணாமலை மாவட்டங்களில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியது:
ஆசிரியர்கள் கற்றல் திறன்களை மேம்படுத்தவும், கண்காணிக்கவும் புதிதாக செல்லிடப்பேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூ லம் வகுப்பறைகளில் கற்பிக்கும் வழிமுறைகள், மாணவர்களின் கற்றல் திறன், மாணவர்கள் எழுப்பிய கேள்விகள், சந்தேகங்களுக்குவிடைய ளித்தல், வகுப்பறை மேலாண்மை , பதிவேடு பராமரித்தல், செயல்வ ழிக் கற்பித்தல் உள்பட பல்வேறு பிரிவுகளின்கீழ் ஆசிரியர்கள் தின மும் செயலியில் பதிவேற்றம் செய்யவேண்டும்.
அதை மாவட்ட கல்வி அதிகாரிகள் மதிப்பீடு செய்து பள்ளிக் கல்வி இயக்குநரகத்துக்கு தெரி யப்படுத்துவர். பள்ளி ஆய்வின்போது இந்த செயலியில் பதிவேற்றப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் ஆசிரியர்களின் செயல்பாடுகள் மதிப் பீடு செய்யப்படும். சோதனை அடிப்படையில் சென்னை, திருவண்ணாமலை மாவட்டங்களில் அமலாகியுள்ளது. அதன் குறைகளை சரி செய்து, விரைவில் மாநிலம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும் என்றனர்.
Will you directly watch cc TV camera ìn directory chennai
ReplyDelete