கல்வி நிறுவனங்களுக்கு பல்கலை மானியக்குழு உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 29, 2019

கல்வி நிறுவனங்களுக்கு பல்கலை மானியக்குழு உத்தரவு


கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், பாலியல் பிரச்னைகளை தடுக்கும் வகையில், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள, கல்வி நிறுவனங்களுக்கு, பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.பாலியல் பிரச்னையின்றி, பெண்களுக்கு பாதுகாப்பான வளாகத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளது.

கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளுக்கு, பல்கலை மானிய குழு பிறப்பித்துள்ள உத்தரவு:

 உள் விவகார புகார் குழு ஏற்படுத்தி, பாலியல் தொல்லைகள் குறித்த புகார்களை பெற வேண்டும். பாலின வேறுபாடு மற்றும் பெண்களின் உரிமைகள் குறித்து, மாணவ - மாணவியர் மத்தியில், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாணவியர் மற்றும் பெண் ஊழியர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பாலியல் அத்துமீறல் தடுப்பு மற்றும் தீர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.பெண்களுக்கான பாதுகாப்பு சட்ட விதிகள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பெண்கள் பாதுகாப்பாக உணரும் வகையிலான வளாகத்தை உருவாக்க வேண்டும். மாணவர் குறைதீர்வு டிஜிட்டல் தளம் உருவாக்கப்பட வேண்டும். பாலியல் ரீதியான புகார்களை ரகசியமாக தெரிவிக்கும் வகையில், 1800 111 656 என்ற, கட்டணமில்லாத தொலைபேசி எண்ணை, கல்லுாரி வளாகத்தில் உள்ள அறிவிப்பு பலகையில் மாணவ - மாணவியருக்கு தெரியும் வகையில், வெளியிட வேண்டும். இவ்வாறு, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி